இராமேஸ்வரம், நவ.7- இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் படகுகளை விடு விக்கக் கோரி இராமேஸ் வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் திங்க ளன்று தொடங்கியது. இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 400-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகளும், 350-க்கும் மேற் பட்ட சிறிய விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 5 அன்று இராமேஸ்வரத்திலி ருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகள், 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து, தலைமன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி னர். நவம்பர் 17-ஆம் தேதி வரை இவர்கள் அனைவரை யும் சிறையில் அடைக்க நீதி பதி உத்தரவிட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை கண்டித் தும், மீனவர்கள் மற்றும் பட குகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்கக் கோரி திங்க ளன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் 500 க்கும் மேற் பட்ட விசைப்படகுகள் துறை முகத்தில் நிறுத்தப்பட்டுள் ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாயன்று தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. இந்நிலையில், போரா ட்டத்திற்கு ஆதரவு தெரி விக்காத சிறிய விசைப்படகு மீனவ சங்கத்தினர், மீன் வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர்.