விருதுநகர், ஜூன் 8- உரக்கட்டுப்பாடு சட் டத்தை மீறி கூடுதலான விலைக்கு உரங்களை விற் றால் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத் தில் பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா 3279 மெ.டன்னும், டிஏபி 884 மெ.டன்னும், பொட்டாஷ் 264 மெ.டன்னும், காம்ப் ளக்ஸ் 1714 மெ.டன்னும், எஸ்எஸ்பி 263 மெ.டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள் ளது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்தும், இரசீது வழங்கி யும், சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்களை மட்டுமே உர விற்பனையாளர்கள் வழங்க வேண்டும். மானிய உரங்கள் விற் பனை செய்யும் போது சில உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பத் திற்கு மாறாக இதர இடு பொருட்களை கட்டாயப் படுத்தி விற்பனை செய்வ தால் விவசாயிகளுக்கு கூடு தல் செலவு ஏற்பட வாய்ப் புள்ளது. விவசாயிகள் கேட் கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். உரங்க ளின் விலை, இருப்பு விப ரங்கள் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தக வல் பலகையில் தினமும் குறிப்பிட வேண்டும். பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண் டும் உரங்கள் வழங்கக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்குட்பட்டு விற் பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறி யப்படும் விற்பனையா ளர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுப்பதுடன் விற் பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். உரங் கள் மற்றும் உர விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 04562 - 252705 என்ற எண்ணில் தெரிவிக்க லாம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.