districts

img

மதுரை மாநகராட்சியில் தொடங்கிய தடுப்பூசி முகாம்

“ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  முதல் மார்ச் வரை நாய்களின்  இனச்சேர்க்கைக் காலம் தொடங்கு கிறது. நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் நாய் கடிக்கு உள்ளாகின்றனர். நாய்கடிக்கு உள்ளா னவருக்கு குறைந்தது ஐந்து டோஸ்  தடுப்பூசி தேவைப்படும். நாய்கடிக்கு உள்ளான அனைவரும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மாட்டார்கள் என்கிறார் தேசிய  நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பொது  சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர். சிம்மி திவாரி”. தமிழ்நாட்டில் குறைந்தது ஒவ்வொரு ஆண்டும் 20-25 பேர் வெறிநாய்க்கடியால் இறக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு 48,323 பேரும் 2022-ஆம் ஆண்டு  46,962 பேரும் நாய்க்கடிக்கு உள்ளாகி யுள்ளனர். 2021-ஆம் ஆண்டு ஒருவரும்,  2022-ஆம் ஆண்டு இருவரும் இறந் துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 2017-ஆம் ஆண்டு 16 பேர், 2018-31,  2021-19, 2022-18-20 பேர் உயிரிழந் துள்ளனர். மதுரை பரவை ஏஐபிஇஏ நகரைச்  சேர்ந்த என்.செந்தில்குமார் நாய்க்கடி யால் பாதிக்கப்படுவோர் குறித்து  பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியளிப்ப தாய் உள்ளது. சமயநல்லூர் சத்திய மூர்த்தி நகரில் உள்ள ஆரம்பச் சுகா தார நிலைய மருத்துவ அதிகாரியின் பதிலின்படி, மொத்தம் 2,245 நாய்க் கடி யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனையில் 663 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில்  30 பேர் பரவை மற்றும் ஏஐபிஇஏ நகரைச்  சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள் ளது. (2023 ஜூலை 31) இப்பகுதியில் ஜூன்-ஜூலை மாதத்தில் ஒரே நாளில் ஐந்து பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்பது அதிர்ச்சியளிப்பதாய் உள் ளது. நாய்ப்பிரச்சனை தீர்ப்பதற்குக் கூட உயர்நீதிமன்றம் செல்லவேண்டி யுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் தாக் கல் செய்த மனுவை ஜூலை மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது குறித்து அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

கும்பல்-கும்பலாக நாய்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மட்டுமல்ல மதுரை மாவட்டம் முழு வதுமே நாய்த் தொல்லை நீக்கமற நிறைந்துள்ளது. மாநகராட்சியில் நாய்களின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வருவது குப்பைத் தொட்டி களே. உதாரணத்திற்கு மதுரை மாநக ராட்சிக்குட்பட்ட கூடல்நகர் அருகே நிரந்தரமாக ஐந்து குப்பை டப்பாக்கள் எப்போதும் நிரம்பிவழியும். இரவு 10 மணிக்கு இந்தப் பகுதிக்கு மாநக ராட்சி அதிகாரிகள் வந்தால் குறைந்தது ஒரே நாளில் 15 நாய்களுக்கு தடுப்பூசி யை செலுத்த முடியும். திருப்ப ரங்குன்றம், திருநகர் பகுதிகளில் தெரு நாய்களுக்குப் பஞ்சமில்லை. இந்த நிலையில், மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் தெருக்களில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை முதல் தொடர்ந்து பத்து தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்த முகாம் தினம்தோறும் காலை  6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை  நடைபெறும். மதுரை மாநகராட்சி நிர்வா கம் அறிவித்திருந்த நிலையில் திங்க ளன்று மதுரை ஆரப்பாளையம் ரவுண் டானா அருகே மேயர் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் கே. ஜே  பீரவீன் குமார் ஆகியோர் முன்னிலை யில் தெருக்களில் திரியும் வெறி நாய்  களுக்கு தடுப்பூசி போடும் தொடங்கி யுள்ளது. மதுரை மாநகராட்சி மட்டுமல்ல அனைத்து நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளிலும் இப்பணியை தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட  வேண்டும். ஏனென்றால், தெரு நாய் களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி என எந்த எல்லையும் தெரியாது. அவைகளுக்கு எந்த வரையறையோ எல்லையோ கிடையாது.