தூத்துக்குடி,மார்ச்28 தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் நடை பெற்ற மறியலில் பெண்கள் உட்பட 814 பேர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 13 பெண்கள் உட்பட 162 பேர் கலந்து கொண்டனர் . மறியல் போராட்டத்தில் தொமுச மாவட்ட செயலா ளர் ரவீந்திரன் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர் பேச்சிமுத்து, ஏஐடியுசி மாவட்ட தலைவர் பாலசிங்கம், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, ஐஎன்டியுசி நிர்வாகிகள் பால்ராஜ், ராஜகோபால், ஏஐடியுசி நிர்வாகிகள் சங்கர வேல், சுப்பையா, ஏஐஐசிசிஐடியு மாவட்ட தலைவர் சகாயம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பூமயில்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம் எஸ் முத்து, உரிமைகரங்கள் ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் மாநிலதலைவர் எம்.ஜெயராஜ், மாவட்டச்செயலாளர் ராசிக்முசம்மில், மாவட்ட பொருளாளர் ரமேஷ்,சிஐடியு பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குமாரவேல், மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நாகராஜ், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவபெருமான், மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருமாள், எஸ் சி டி சி கென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமையா, விரைவு போக்குவரத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி பிச்சைமணி, தர்மராஜ், தட்சின ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் தலைவர் கருப்பசாமி,தட்ஷன ரயில்வேஎம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் குரூஸ் அந்தோணி தளவாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரத்தில் பொது வேலை நிறுத்தத்தை ஓட்டி பஸ் நிலையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியூ,ஏஐடியூசி எல்பி எஃப் ,ஏசிசிடிசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக 61 பெண்கள் உள்ளிட்ட 142 பேர் மறியல் செய்து கைதாகினர். மறியல் போராட்டத்திற்கு சிஐடியூ தீப்பெட்டி தொழிற்சங்கத்தின் வட்டார தலைவர் மோகன்தாஸ் ,ஏஐடியூசி பாரதிமில் செயலாளர் காளியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்டுமான சங்க செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார் .இந்த மறியல் போரில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் . கு.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் தோழர் மணி ,விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் நடராஜன், பாரதி மில் பொருளாளர் மாணிக்கவாசகம் ,முத்தழகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கருப்பசாமி , வடமலாபுரம் கிளைச் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,கட்டுமான ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சேது உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
துறைமுகம்
அகில இந்திய பொது வேலை நிறுத்தம் முதல் நாளான திங்களன்று தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்று சிப்ட்களிலும் 100% வேலை நிறுத்தம் நடை பெற்றது. எட்டயபுரம் பாரதி மில்லில் முழுமையான வேலைநிறுத்தம் நடைபெற்றது. தாரங்கதாரா கெமிக்கல் நிறுவனத்தில் ஒரு பகுதி தொழிலாளர்களும், தூத்துக்குடி மின் திட்டத்தில் 60 சதம் பேரும், போக்குவரத்தில் 50 சதம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் . தூத்துக்குடியில் பகுதி உப்பளங்களிலும், கோவில்பட்டியில் ஒரு பகுதி தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
விளாத்திகுளம்
அனைத்து தொழிற்சங்கங்கள் , விவசாய சங்கங்கள் , சார்பாக விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு ஜோதி, தொமுச சுப்பையா, ஏஐடியுசி முள்ளன்,ஏசிசிடியு சண்முகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் திமுக நகர செயலாளர் வேல்ச்சாமி,தொமுச நிர்வாகிகள் சந்திர சேகர்,முத்துராஜ்,கே.மாரிமுத்து, கிருஷ்ணமூர்த்தி சிஐடியு நிர்வாகிகள் யோவான், ராமர்,கிருஷ்ணராஜ், முருகன், சூசைராஜ், விவசாயிகள் சங்கம் ராமலிங்கம், பிச்சை, வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27 ஊழியர்களில் 23 பேர் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.. இதன் காரணமாக வெறிச்சோடிக் கிடந்த விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் படத்தில் காணலாம் கோவில்பட்டி கோவில்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கிருஷ்ணவேணி, சிஐடியு மாநில நிர்வாகி, மாவட்டக்குழு உறுப்பினர் தெய் வேந்திரன், சித்ரா (தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் ) சிவகுமார் (KTC) மாரியப்பன் (மின்) பெருமாள் (மின்) கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் அந்தோணி செல்வம், மாரியப்பன், கணேசன், ஆட்டோ சங்கம் சார்பில் பாலமுருகன் கிட்டு பங்கேற்றனர்.
135 வங்கி கிளைகள் மூடப்பட்டன
மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் பண பரிவர்த்தனை பாதிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 165 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இதில் சுமார் 2200பேர் பணிபுரிந்து வருகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 135 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. வங்கி ஊழி யர்கள் 1600பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ள னர். வேலை நிறுத்தம் காரணமாக இன்று ஒரே நாளில் ரூ.280கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப் பட்டுள்ளது.