தூத்துக்குடி, மார்ச் 8 தூத்துக்குடி காமராஜ் கல்லூரில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் குறித்த மாநில அளவிலான கருத்த ரங்கு நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தொல்லியல் குறித்த மாநில அளவி லான ஒரு நாள் கருத்தரங்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமையில் நடந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்தரங்கை துவக்கிவைத்து பேசினார். தர்மபுரி அரசு கலை கல்லூரி உதவி பேராசியர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார். முன்னதாக முதுகலை மாணவி சரண்யா வரவேற்றார். நிறைவாக இளங்கலை மாணவி துர்கா நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை துறை தலைவர் தேவராஜ் தலைமையில் வரலாற்று துறையினர் செய்திருந்தனர்.