districts

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்

மதுரை, டிச.14-  மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவை இன்னும் துவங்கபடாமல் உள்ளது.  இந்த அலங்கநல்லூர் சர்க்கரை ஆலையில் 2,000 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் டன் கரும்பு அரவைக்கு உள்ளது. தரணி ஆலை இயங்காத நிலையில், அந்த ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பு 1.50 லட்சம் டன்னை அலங்காநல்லூர் ஆலைக்கு திருப்பிவிடச் செய்ய அரசுக்கு கடிதம் எழுதி, தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டுள்ளது. பதியாத கரும்பு ஆலைக்கு சுமார் 15 ஆயிரம் டன் அரவைக்கு வரவும் உள்ளது.

ஆகவே இந்தாண்டு அரவைக்கு 2.35 லட்சம் டன் இருப்பதால் கரும்பு விவசா யிகள் இந்தாண்டே ஆலை துவங்கும் அறிவுப்புக்காக காத்திருக்கின்றனர். அரவையை உடனே துவக்க வேண்டும். இந்தாண்டே உப மின் நிலையத்தையும், ஆலை யையும் இயக்க வேண்டும்.விவசாயிகளிடம் ஆலை கரும்பினை கொள்முதல் செய்திட வேண்டும் என்று வலி யுறுத்தி  தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலை மையில் ஆலையை  துவக்கும் வரை ஆலை முன்பு காத்தி ருக்கும் போராட்டம்  செவ்வா யன்று துவங்கியது.

 இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் செயலாளர் என்.ஸ்டாலின்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், மாவட்டப் பொரு ளாளர் வி.அடக்கிவீரணன்  வி. சேகர், பி.அய்யாவு, பி.நாகேந் திரன், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் ,  கே.மொக்கமாயன், வி.மாதவன், எம்.எஸ்.அய்யாங் காளை, பி.போஸ், ஆர்.முத்து லிங்கம், எஸ்.நாகராஜன், கரு.சுப்பையா, ஆர்.ராம்ராஜ்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் எஸ் ஆண்டிச்சாமி , வாடிப்பட்டி  ஒன்றியச் செயலா ளர் ஏ.வேல்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளருமான கே.ராஜேந்திரன் போராட்டத்தை ஆதரித்து பேசினார். கரும்பு விவசாயிகள் தாங்களாகவே உணவு சமைத்து, சாப்பிட்டு, போ ராட்டத்தை தொடர்ந்து  வரு கின்றனர்.