districts

img

ஊதிய உயர்வு கோரி ஸ்பிக் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன. 11 ஸ்பிக் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஸ்பிக் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற இடங்களில் உள்ள உர நிறுவனங்களில் வழங்கப் படும் ஊதியத்தை  ஸ்பிக் ஆலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் வழங்க வேண்டும், காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண் டும் உள்ளிட்ட  கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஸ்பிக் எம்ப்ளா யிஸ் யூனியன் தலைவர் யுவ ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ரசல்,  எச்எம்எஸ் தொழிற் சங்க தலைவர் துறைமுகம் சத்யா, எல்பிஎப்   மாவட்ட செயலாளர் சூசி ரவீந்தி ரன் ஆகியோர் சிறப்புரை  ஆற்றினர். மாரி செல்வ ஈஸ்வ ரன் நன்றியுரையாற்றினார்.