திண்டுக்கல், செப்.17- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவல கத்தில் திண்டுக்கல் மாவட்ட தொழில் விவசாய மலர் வெளியீட்டு விழா நடை பெற்றது. இதில் பங்கேற்று மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசியதா வது:- உலகத் தலைவர்களில் ஒருவராக தன்னைக் காட் டிக்கொள்வதற்காக பிரத மர் ஜி-20 மாநாட்டைப் பயன்படுத்த முயற்சித்தார். மாநாடோ “பிளாப்” ஆகி விட்டது. சிஏஜி. புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்கள் கைது அறிக்கை மூலம் பாஜகவின் ஊழல் அம்பலமாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்கும் போது நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என்று அதிகாரிகள் கேட்ட தாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கபில் சிபில் கேட்டு பாஜக வின் கபட வேடத்தை அம்ப லப்படுத்தியுள்ளார். அம லாக்கத்துறை, வருமான வரித்துறைகள் மூலம் எல்லோரையும் மிரட்டி பாஜகவில் சேர்க்க வைப்ப தற்காக தீவிரமாகச் செயல் பட்டு வருகின்றன. சந்திரயானுக்கு மேலே இன்னொரு சந்திரயான் பறப்பது போல் விலை வாசி உயர உயர பறந்து கொண்டே யிருக்கிறது. பாஜக எப்படி யாவது தமிழ்நாட்டில் நுழைய பல்வேறு பிரயத்தனங்க ளைச் செய்கிறது. 2024-தேர்த லில் எப்படியாவது ஆட்சி யை பிடிக்க வேண்டும் என்று அலைகிறது. படுத்துக் கிடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட வுடன் தூசி தட்டி எடுத்து அந்தக் கூட்டத்தை நடத்து கிறது. பாஜகவை நாடாளு மன்றத் தேர்தலில் முறிய டிக்க அவர்களது ஊழல்- முறைகேடுகளை தொட ர்ந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றார்.