மதுரை, மே 23- முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள் வது கட்டாயம் என்று திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதன்மை யர் ரேவதி கயிலைராஜன் கூறினார். மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள உள்ள மணியம்மை நர்சரி பள்ளியில் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஆகியவை இந்தியர்களி டையே மிகவும் பொதுவாக உள்ளது. நோய்க் கான அறிகுறிகள் தென்பட்டால் நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரி டம் செல்லுங்கள். மேமோகிராம் (Mammogram) சோதனையை வருடத் திற்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். சுய பரிசோதனை மூலம் மார்பக புற்று நோயைக் கண்டறிய முடியும். பெண்கள் குளிக்கும் போது, மார்பகப் பகுதியில் வலி யற்ற நிலையான அல்லது நகரும் தன்மை யிலான கட்டிகள் ஏதேனும் உள்ளதா? மார்ப கத்தில் ரத்தக்கசிவு உள்ளதா? மார்பகப் பகுதியில் சிவப்பு நிறமாற்றம் என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் மறு தொடக்கம் அல்லது அதி கப்படியான வெளியேற்றம் இருந்தால், உட னடியாக தங்களை மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதன் மூலமும். அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை, மன உறுதி ஆகியவற்றின் மூலம் 100 சதவீதம் குணப்படுத்த முடியும். மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களுக்கு பொதுவானது. ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் பொது வானது. உணவில் உள்ள இரசாயனக் கலப் படத்தாலும் புற்றுநோய் ஏற்படலாம். புற்று நோயை தடுப்பதில் உணவும் வாழ்க்கை முறையும் முக்கிய காரணிகளாக உள்ளன என்றார். நிகழ்வில் பங்கேற்ற என்.கல்பனா பேசு கையில், ‘‘மார்பகப் புற்றுநோய்க்கான பரி சோதனை செய்யலாமா என்ற அச்சம் கூடாது. எல்லாவற்றையும் விட வாழ்க்கை முக்கிய மானது’’ என்றார். நிகழ்வில் மணியம்மை நர்சரி பள்ளி தாளாளர் பி.வரதராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.