நாகர்கோவில், மே 8- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மற்றும் ஹோலிகிராஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் நாகர்கோவி லில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் உள்ள அரங்கில் நடை பெற்றது. மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மற்றும் ஓய்வுபெற்ற காவலர் சங்கத்தின் சட்ட ஆலோ சகர் வழக்கறிஞர் மரிய ஸ்டீபன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற காவலர்களின் சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் செயலாளர் பென்சிகர், ஹோலி கிராஸ் மருத்துவமனை தலைமை நிர்வாகி அத்மஜா, சங்கபொரு ளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பேசினர் மருத்துவ முகாமில் ஹோலி கிராஸ் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்து வமனை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு காவலர் களுக்கு உடல் பரிசோதனை செய்து இலவச மருந்துகளை வழங்கினர்.