மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு 1 ஆவது பகுதிக்குழு சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற சிறப்பு பேரவையில் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவரிடம் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதி ரூ.72 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.சிவராமன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.மல்லிகா முன்னிலை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.