மதுரை, மே 20- மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஏற்பாட்டில் ஆறாவது சுகாதார திருவிழா பால ரெங்காபுரம் அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி யன்று மேயர் வ. இந்திராணி தலை மையில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் சுகாதார திரு விழா முகாமினை துவக்கி வைத் தார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மாநக ராட்சி ஆணையாளர் மரு. கா.ப. கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசியதாவது: இந்த சுகாதார திருவிழா கிராமப்புறங்களுக் கானது. நான்தான் மாநகராட்சி பகு தியில் ஒன்றாவது நடத்த வேண்டும் என்று பெரும் முயற்சி மேற் கொண்டு தற்போது நடத்தப்படு கிறது. தமிழகத்திலேயே மாநக ராட்சிக்கு நடத்தப்படும் ஒரு சுகா தார திருவிழா இதுவாகத்தான் இருக்கும். இங்கு அனைத்து வகை யான மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான அரங்குகள் ஒவ்வொன்றாக தனியாக அமைக் கப்பட்டுள்ளது. இது வரை ஐந்து சுகாதார திருவிழா நடத்தப்பட்டு இது ஆறாவது சுகாதார திரு விழா. ஐந்து நிகழ்விலும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து பயன் அடைந்துள்ள னர். மேல் சிகிச்சை தேவைப்படு வோர் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளார்கள். மதுரை மாநக ராட்சி ஆணையாளர் சிறப்பாக இந்த முகாமினை ஏற்பாடு செய்துள் ளார்.
ஆரம்ப சுகாதார மையங்களில் மகப்பேறு அதிகரிப்பு
பத்திரிகை நண்பர்கள் ஒரு முக்கியமான செய்தியினை வெளி யிட வேண்டும். “மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் மகப்பேறு என்பது முன்பு 60 முதல் 70 வரை நடைபெற்று வந்தது. இப்போது அது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது 140 முதல் 150 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறுகின்றது. இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும். ஏனென்றால் ஆரம்ப சுகாதார மையங்களில் கிராமப்புறங்களில் நடப்பதை விட மாநகராட்சி பகுதிக ளில் அதிகம் இருக்கும் ஆரம்ப சுகா தார மையங்களில் நடக்கும் பிர சவங்கள் என்பது மிகக் குறைவு. தற்போது மாநகராட்சி ஆரம்ப சுகா தார மையங்களில் இது அதிக ரித்துள்ளது. அதற்கு காரணம் அங்குள்ள மருத்துவர்கள், செவி லியர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளின் சாதனையாகத்தான் இதை கூற வேண்டும். அதேபோல் மகப் பேறு மரணம் என்பது கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்டத் தில் ஒன்று கூட நடைபெற வில்லை. இந்த இரண்டு விஷயத்திற்காகவும் மருத்துவ துறை ஊழியர்களை நான் பாராட்டுகிறேன். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மாவட்டத்திற்கான ஒரு மருத்துவ மையமாக மாற்றுவ தற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் . இவ்வாறு அவர் பேசினார். சுகாதார திருவிழா முகாமில் இதயநோய் , மகப்பேறு, சிறுநீர கம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறை சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படு கிறது . இம்முகாமில் “கொடுஞ் செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொ ழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் நொடர்பு அலுவலர் மகேஸ் வரன், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி , செல்வி கார்மேகம், உதவி நகர்நல அலுவலர் மரு. தினேஷ்குமார், சுகாதார அலுவர் சிவகப்பிரமணியன், மருந்துவ அலு வலர்கள் மரு. ஸ்ரீகோதை, மரு.புவனேஸ்வரி, செவிலியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மதுரை மாநகர் மா.கணேசன், பகுதிக்குழுச் செயலாளர் ஜெ.லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.