சிவகங்கை மாவட்டத்தில் 414 மி.மீ மழை
சிவகங்கை, அக்.15- சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. திருப்புவனத்தில் 117 மில்லி மீட்டர், சிவகங்கையில் 85 மில்லி மீட்டர், மானாமதுரையில் 55 மில்லி மீட்டர், இளையான்குடியில் 15 மில்லி மீட்டர், காரைக்குடியில் 22 மில்லி மீட்டர், தேவகோட்டையில் 16.06 மில்லி மீட்டர், காளையார் கோவிலில் 33.06 மில்லி மீட்டர், சிங்கம்புணரி யில் 102.08 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது மாவட்டம் முழுவதும் 414.06 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 59 .15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதியவரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு
விருதுநகர், அக்.15- விருதுநகரில் முதியவரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜீவராஜ் (68). இவருக்கு சொந்தமான வீடுகள் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பராசக்தி நகரில் உள்ளதாம். இந்நிலையில், அந்த வீடுகளில் வசிப்போர் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது குறித்து ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஜீவராஜை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு, முதியவர் என்றும் பார்க்கா மல் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து ஜீவ ராஜ் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், ஊராட்சிமன்றத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓ.பி.எஸ். பண்ணை வீட்டில் டிவி திருட்டு
தேனி, அக்.15- பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து தொலைக்காட்சி பெட்டி திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே கைலாசபட்டி யில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த மான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ்த்தளத்தில் பார்வையாளர்களை சந்திப்பதற்கும் முக்கிய நபர்களை சந்திப்பதற்குமான இரண்டு அறைகள் உள்ளன. மாடியில் ஓ.பி.எஸ். ஓய்வெடுப்பதற்கான அறை தனியாக உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரில் ஏறி குதித்த மர்மநபர்கள் ஓ.பி.எஸ். ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவின் பூட்டை உடைத்து அந்த அறையில் இருந்த 54 இன்ச் டிவியை திருடிச் சென்றனர்.சனிக்கிழமை காலையில் பணி யாளர்கள் வந்தபோது மாடியில் அறைக்கதவு உடைக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது. தகவலறிந்த தென்கரை காவல்துறையினர் ஆய்வு செய்து தடயவியல் கைரேகை களை பதிவு செய்தனர்.பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கனமழையால் கிராம ஓடைகளில் வெள்ளப்பெருக்கு
கடமலைக்குண்டு, அக்.15- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கட மலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட அனைத்துக் கிராமங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் உள்ள அனைத்து ஓடை களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் ஓடை களில் கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளிலும் நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிக ரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக் கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகளும் பொதுமக்க ளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீட்டில் சோதனை: ரூ.5.85 லட்சம் பறிமுதல்
விருதுநகர், அக்.15- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் உமாசங்கர். இந்நிலையில், உதவி இயக்கு நர் அலுவலகத்தில் கடந்த வெள்ளியன்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, உமா சங்கரின் கைப்பையில் இருந்து கணக்கில் வராத ரூ.6 லட்சமும், அலுவலகத்தின் பிற இடங்களில் சோதனையிட்டதில் ரூ.68 ஆயி ரமும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்த னர். இதையடுத்து அப்பணத்தை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீ சார், உமா சங்கரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை, மன்னர் திருமலை நக ரில் உள்ள உமாசங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அங்கு, கணக்கில் வராத ரூ.5.85 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து, அந்தப் பணத்தை போலீசார் பறி முதல் செய்தனர்.
பராமரிப்புப் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை, அக்.15- வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக் கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்க ரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற் காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/ 06830) அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவ கங்கை - மானாமதுரை ரயில் நிலையங் கள் இடையே பகுதியாக ரத்து செய் யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையே நடை பெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாம தமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவா யூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழ மைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாக வும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும். இத னால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவா யூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணி யாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல் படாது. மேலும் அக்டோபர் 27, 28 மற்றும் 31 ஆகிய நாட்களில் பாலக்காடு - திருச் செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரி வில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கள் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். கொடைக்கானல் ரோடு மற்றும் வாடிப் பட்டி ரயில் நிலையங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கி றது. இதன் காரணமாக அக்டோபர் 17 முதல் அக்டோபர் 22 வரையும் மற்றும் அக்டோ பர் 26 முதல் அக்டோபர் 29 வரையும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று மதுரை கோட்ட நிர்வா கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உலா வந்த யானை கூட்டம்
திருநெல்வேலி, அக்.15- நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்ற ழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரை வெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இந்நிலையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உலா வந்தன. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பாளை மத்திய சிறையில் சோதனை : செல்போன், சிம் கார்டுகள் சிக்கின
திருநெல்வேலி, அக்.15- பாளை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா? என அடிக்கடி காவல்துறையினர் கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம். இந்நிலையில், மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் என்பவர் தனது அறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைத்துறை அலுவலர் வினோத் தலைமையில் காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் செல்போன் மற்றும் சிம்கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
வாழைகளை நாசம் செய்த காட்டுப் பன்றிகள்
திருநெல்வேலி, அக்.15- நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூர் மலையடிவாரத்தில் உள்ள விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளியன்று இரவு மாவடியைச் சேர்ந்த விவசாயிகள் ராமலிங்கம், டேவிட், ராஜலிங்கம் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்த காட்டுப் பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள, 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன. இதனால் விவ சாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதுபற்றி திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காட்டு பன்றிகள் அட்டகா சத்தை தடுக்க வேண்டும், காட்டு பன்றிகளை வனவிலங்கு கள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி, அக்.15- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிக ளில் மழை பெய்து வந்த நிலையில், வெள்ளி யன்று அணை பகுதிகளில் அதிகமான மழை பெய்தது. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காலை முதல் மழை தொடர்ந்து பெய்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லிமீட்டர் மழை கொட்டியது. சேர்வலாறில் 26 மில்லிமீட்ட ரும், மணிமுத்தாறில் 19.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக 250 கனஅடி வரை பாபநாசம் அணைக்கு நீர்வரத்து இருந்து வந்த நிலையில், வெள்ளியன்று பெய்த மழையால் மேலும் 100 கனஅடி அதிகரித்து சனிக்கிழமை வினாடிக்கு 363.75 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் அணையின் நீர்மட்டத் தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு 48 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர பகு தியில் பலத்த மழை பெய்தது. பாளையில் 18 மில்லிமீட்டரும், நெல்லை யில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகி றது. சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.
சத்துணவு ஊழியர்கள் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, அக்.15- குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.7,850 அகவிலைப்படி உடன் இணைத்து வழங்கக் கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் கள் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் சங்கர வடிவு தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர்கள் சுடலைமுத்து, குட்டி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிச்சையா, அனைத்து ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் ஈனமுத்து, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் விளக்கிப் பேசி னர். சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க பாளையங்கோட்டை தலைவர் முத்துமாரி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அகவிலைப்படி உடன் இணைத்து வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூ தியம் வழங்க வேண்டும், மருத்துவ படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.
நெல்லையிலிருந்து பீகாருக்கு தீபாவளி சிறப்பு ரயில்
திருநெல்வேலி, அக்.15- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி யிலிருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதன்படி திருநெல்வேலி - தானாப்பூர் சிறப்பு ரயில் (06190) அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 25 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு மதுரை, பழனி, கோயம் புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக் கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தானாப்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக பயணித்து திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். தானாப்பூர் செல்லும் சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக் கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடி வாடா, கல்கலூர், பீமாவரம் நகர், தனுகு, நீடாவாலு, ராஜமுந்திரி, சாமல்கோர்ட், துனி, அனகாபள்ளி, துவாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனியகுடா, கேசிங்கா, டிட்லகார், பாலங்கீர், பர்கர் ரோடு, சம்பல்பூர், ஜர்சுகுடா, ரூர்கேலா, சக்கரத்தார்பூர், பருலியா, ஜோய்ச்சண்டிபகர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசித், ஜாஜா, கியூல், மொகமெக், பக்தியார்பூர் பாட்னா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தானாப்பூர் - திருநெல்வேலி ரயில் கோயம்புத்தூர், போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப் படமாட்டாது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிக ளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.