சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கே வந்து தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் பிரசாந்த் வங்கி கணக்கு புத்தகங்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வங்கியின் துணை மேலாளர் சுவாமிநாதன் செய்திருந்தார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.