சிவகங்கை,ஜன.13- சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி கள்,பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் ஜனவரி 13 அன்று சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், உடைகுளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் சிவரா மன், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகர்மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிச்சேரி உள்ளிட்டோர் பங் கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .திருப்புவனம் பேரூராட்சியில் திருபுவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை யில் செயல் அலுவலர் ஜெயராஜ் முன்னிலை யில் நடைபெற்றது. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலை வர் லதா அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. மானாமதுரை நகராட்சியில் தலைவர் மாரியப்பன்கென்னடி தலைமையிலும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் முத்தனேந் தல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கும ரேசன் தலைமையிலும் சிறுகுடி ஊராட்சியில் சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவி பஞ்சவர்ணம் தலைமையிலும்,ராஜ கம்பீரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரஹ்மான் தலைமையிலும் பொங்கல் விழா நடைபெற்றது.
செய்களத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி ஜானகி சுப்பிரமணி தலைமையிலும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காட்டு நெடுங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாத்தணி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிரா ஜுதீன் தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சியில் வேம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சமய முத்து தலைமையிலும் இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகநாதன் தலைமை யிலும் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றி யம் கொல்லங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மெய்ஞானமூர்த்தி தலைமை யிலும் விழா நடைபெற்றது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கால் பிரவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாண்டி தலைமையிலும் சின்ன கண்ணனூர் ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவர் அங்குசாமி தலைமையிலும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் முத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி பாண்டி செல்வி மலைக்கண்ணு தலை மையிலும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழப்பூங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி ஆனந்த ஆனந்தவல்லி தலைமையி லும் நடைபெற்றது.மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் தெ.புதுக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலெட்சுமி ராமச் சந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.