காரியாபட்டி, மே 4- விருதுநகர் மாவட்டம், காரி யாபட்டி வட்டத்திற்கு உட்பட்ட வலுக்கலொட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டி அருகே உள்ளது வலுக்கலொட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி நிர்வாகமானது, வீடு ஒன்றுக்கு, ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கான பங்குத் தொகை ரூ.500 வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காதவர் களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை தர முடியாது எனவும் மிரட்டியுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான குடியிருப்புவாசி கள் அதற்கான பணத்தை வழங்கி யுள்ளனர். ஆனால், 70 பேரிடம் பணம் இல்லை. எனவே, பின்பு, தருகி றோம் எனக் கூறியுள்ளனர். அதன் பிறகும் வேலைக்கான அட்டை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத் துள்ளது. இதனால், ஆவேசம டைந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்கள், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைமையில் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் உடனடி யாக 70 பேருக்கும் 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப் பட்டது. இதையடுத்து போராட் டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக நடைபெற்ற போராட்டத்தில் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, மாவட்ட செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலா ளர் ஏ.அம்மாசி, சிஐடியு கன்வீனர் முகமது அலி ஜின்னா, வடிவேல் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.