மதுரை, ஜூன் 20- பழனியில் கடை உரிமை யாளர்கள் விரும்பினால் தற்காலிக கடைகளை பயன்படுத்திக் கொள்ள லாம். இல்லையெனில் அவர்களது விருப்பத்தின் பேரில் வேறு இடங்களுக்கு செல்லலாம் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. பழனி நகராட்சி தரப்பில் தற்காலிக கடைகள் ஒதுக் கீடு தொடர்பான நகராட்சி ஆணையரின் உத்தரவை எதிர்த்து பழனியைச் சேர்ந்த பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத் தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்ர மணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. பழனி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறு கையில், “மனுதாரர்களுக்கு காந்தி மார்க்கெட்டில் மறு கட்டமைப்பு பணிகள் முடி வடையும் வரை தற்காலிக கடைகள் அமைத்து தருவ தாக தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. அதற்கான இடமும் ஒதுக்கப்பட்ட நிலை யில், மனுதாரர்கள் அதனை ஏற்காமல் அம்மா உணவ கத்திற்கு அருகில் தற்காலிக கடைகள் அமைத்துத்தர கூறு கின்றனர். அந்த இடம் 15 கடைகள் அமைக்க போது மானதாக இருக்காது. கடை களை ஏற்பதும், கைவிடுவ தும் மனுதாரர்களே முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி கள், “தற்காலிக கடைகள் அமைத்து தருவது தொடர் பாக நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுத்துள்ளது. மனு தாரர்கள் விரும்பினால் அந்த தற்காலிக கடைகளை பயன்படுத்திக் கொள்ள லாம். இல்லையெனில் அவர்களது விருப்பத்தின் பேரில் வேறு இடங்களுக்கு செல்லலாம். ஆனால் நக ராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தான் தற்காலிக கடைகளை அமைக்க வேண்டும் என வற்புறுத்த இயலாது. ஆகவே நகராட்சி வழங்கும் மாற்றிடத்தை மனு தாரர்கள் ஏற்றுக்கொள்ள லாம். இல்லையெனில் நக ராட்சி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்கலாம்” எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.