மதுரை, ஜூன் 18- மதுரை மாநகராட்சி 88 வது வார்டு கிறிஸ்தவ தெரு, தெய்வக்கனி, அனுப்பானடி ஆகிய பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் ஓடுவ தால் மிகப்பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் அதிக அளவில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதால் பொது மக்கள் தெருக்களில் நடக்க முடியாத அளவில் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே இதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதி 72 வது வார்டில் முத்துராமலிங்க புரம் 4வது தெரு, 7 வது மேட்டு தெரு ஆகிய பகுதி களில் சாலையை சீரமைக்க வேண்டும், பைக்காரா மற்றும் முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் மற்றும் தெரு விளக்கை சீர மைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மதுரை மேயர் இந்தி ராணியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். சசிகலா, மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் தலைமை யில் மேயரிடம் மனு அளித்த னர். இதில் முனிச்சாலை பகு திக்குழு நிர்வாகி சகுந்தலா, பைக்காரா கிளை நிர்வாகி காசுப்பாண்டி, மாவட்ட பொருளாளர் ஆர். லதா, நிர்வாகிகள் மல்லிகா, யமுனா மற்றும் அனுப்பா னடி, பைக்காரா பகுதி பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். 88வது வார்டில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வரும் குடிநீரை பாட்டிலில் பிடித்து வந்து மேயரிடம் காண்பித்தனர். பின்னர் மேயர் மனுக் களை பெற்றுக் கொண்டு சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு உடனடி யாக சரிசய்ய சொல்கிறேன் என்று கூறினார்.