districts

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு ஆட்சியர் அழைப்பு

மதுரை, ஆக.23- ஜவுளித்துறையில் முன்னோடி மாநி லங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகி றது. இத்துறையின் கட்டமைப்பை வலுப் படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன் றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக் கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன் பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டி டங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ் நாடு அரசின் மானியமாக வழங்கப்படு கிறது.

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்க ளின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத் தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகள வில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

மேற்படி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  தலை மையில் வரும்  28 ஆம் நாள் அன்று பிற்பகல் 3 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சிய ரக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வள ரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள் ளார்.