districts

img

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து மக்காசோளத்தை அரசு கொள்முதல் செய்திடுக!

ஒட்டன்சத்திரம், ஏப்.16-  ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மக்காச்சோளம் அமோக விளைச்ச லால் விலை குறைந்து வருவதால்  குறைந்த பட்ச ஆதார விலை நிர்ண யித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட் டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, பொருளுர், வாகரை, கூத்தம் பூண்டி, அப்பியம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய் யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் விதை வாங்கி வந்து நடவு செய்த 3 மாதத்தில் நன்கு விளைச்சல் அடைகிறது. மக்காச்சோளம் கதிர் அறு வடை செய்து இயந்திரம் மூலம் கதிரில் இருந்து மக்காசோளத்தை பிரித்து எடுத்துக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர். தற்போது அறுவடை செய்யப்  பட்ட நிலையில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ 2 ஆயிரத்திக்குத் தான் தனியார் வியாபாரிகள் வாங்குகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 2600 வரை விற்றது குறிப்பி டத்தக்கதாகும். தொடர்ந்து அதிக வரத்து உள்ளதால் இன்னும் விலை பல மடங்கு குறையவாய்ப்பு உண்டு.

இதுகுறித்து ஒண்டிபொம்மன் நாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி  முருகேசன் என்பவர் கூறுகை யில்,  இடு பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, வழக்கத்தைவிட இந்த  ஆண்டு படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களி னால் பயிர் வளர்ச்சி குறைந்ததால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதித் துள்ளனர்.  வழக்கமாக மக்காச்சோளம், ஏக்கருக்கு 45 மூட்டை வரை மக சூல் இருக்கும். நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணத்தினால்  20 மூட்டை கூட மகசூல் கிடைக்கவில்லை.  அதுபோல கட்டுப்படியான விலை கிடைக்கும் என விவசாயி கள் எதிர்பார்த்திருந்த நிலையில் குவிண்டால், 2,100 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.  தற்போது அதிக வரத்தால் இன்னும் விலை குறைய வாய்ப்பு  உண்டு என்பதால் விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்படுவார்கள். எனவே குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார்.. தும்மலப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமி என்பவர்  கூறுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதி வாகரையில் உள்ள மக்கா சோளம் ஆராய்ச்சி மையத்தை  செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.