பழனி, டிச.21- திண்டுக்கல் மாவட்டம்,தொப்பம் பட்டி ஒன்றியம் மானூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தோழர் கே.கருப்புசாமி (வயது 80) டிசம்பர் 20 அன்று காலமானார். தோழரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமசாமி, எஸ். கமலக்கண்ணன், கே.அருள்செல்வன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் என்.கனகு, பழனி ஒன்றிய செயலா ளர் செல்வராஜ் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர். தோழர் கே.கருப்புசாமிக்கு மருதாயம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.