districts

களக்குடி,குறிச்சிகுளம் கிராமங்கள் தத்தெடுப்பு

திருநெல்வேலி, ஜுலை 8-             புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் பெண் கள், குழந்தைகள் முன்னேற் றத்திற்காக திருநெல்வேலி மாவட் டத்தில் மானூர் தாலுகாவில் குறிச்சி குளம்,களக்குடி ஆகிய இரண்டு கிராமங்கள் தத்தெடுக் கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் குழந் தைகள் மற்றும் பெண் முன்னேற் றத்திற்காக இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  மும்பையை சேர்ந்த விவிட் கார்பன்(கரியமில வாயு) உமிழ்வு குறைப்பு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் கடந்த 20 ஆண்டுகளு க்கு மேலாக கார்பன் மேலாண்மை யின் நிபுணத்துவம் பெற்ற நிறுவ னமாக பணியாற்றி வருகிறது.இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உற்பத்தியை அதி கரிக்கும் விதமாக சூரிய சக்தி மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திநிலையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தி வரு கிறது.அந்த வகையில் திருநெல் வேலி மாவட்டம் மானூர் தாலுகா வில் குறிச்சி குளம்,களக்குடி கிரா மங்களில் காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உற்பத்தி நிலையங்களை விவிட் நிறுவனம் தொடங்க உள்ளது.

 இந்த உற்பத்தி நிலையங்கள் கார்பன் வாயுக்களை வெளி யிடாது.இதனால் புவி வெப்பமடை தல் குறையும்.நாட்டின் எரிசக்தி ஆற்றல் உற்பத்தி வளர்ச்சி அடையும் அதே நேரத்தில் அந்த வளர்ச்சியின் பயன்கள் அடித்தட்டு கிராம மக்களை சென்றடையும் வகையில் விவிட் நிறுவனம் விருதுநகரை சேர்ந்தபிளாசம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் மானூர் தாலுகா வில் குறிச்சி, குளம் களக்குடி ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள பெண்கள், குழந்தை கள் முன்னேற்றத்திற்கான திட் டங்களான சுய உதவி குழுக்கள் சுய சார்பு வேலை பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவமுகாம் போன்றவை களை நடத்த உள்ளது.இதன் மூலம் நீடித்த சுற்று சூழல் வளர்ச்சியுடன் பெண்கள் குழந்தை கள் முன்னேற்றமும் நடைபெறும். விவிட் நிறுவனம் ,பிளாசம் தொண்டு நிறுவனத்துடன் இணை ந்து நெல்லை மாவட்டத்தில் மானூர் பஞ்.,யூனியன்  களக்குடி, குறிச்சிகுளம் ஆகிய இரண்டு கிரா மங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஐடியல் என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. நெல்லை எம்.பி ஞானதிரவி யம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.  விவிட் நிர்வாக இயக்கு னர் புனித் கட்டியல், பிளாசம் இயக்குனர் மெர்சி அன்னபூரணி, மானுார் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், களக்குடி ஊராட்சித் தலைவர் மாரி முத்து, குறிச்சிகுளம் பஞ்., தலை வர் மகுதுணன், விவிட் அதிகாரி ரோகித் சர்மா  உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிக ளின் பல்வேறு கலைநிகழ்ச்சிக ளும் நடந்தன.