நத்தம்,மே 13- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாம்பழ குடோன்களில் ஸ்பிரே முலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையிலான குழுவினர் நத்தத்தில் உள்ள மாம்பழ குடோன்களில் திடீர் சோதணை நடத்தினர். அப்போது இரண்டு குடோன்களில் எத்தீபான் ஸ்பிரே முலம் ஒன்றரை டன் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த மாம்பழங்களை மண்ணில் பள்ளம் தோண்டி புதைத்து அழித்தனர். மேலும் அருகில் உள்ள குடோன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசாயனம், ஸ்பிரே முலம் மாம்பழங்களை பழுக்க வைக்க கூடாது என எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர்.