திருப்பூர், ஜன.12- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்படும், ஆளுநர் ரவி தமிழ் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி மதச் சார்பற்ற முற்போக்கு கட்சிகள் சார்பில் திருப் பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோ சனை கூட்டதில், ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி வியா னன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலா ளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத் துக்கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் வேந்தன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர மாவட்ட செயலாளர் ஆர். நாகராஜ், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுசாரி, கொங்குநாடு தேசிய கட்சியின் மாந கர மாவட்ட அவை தலைவர் சுரேஷ், ஆதித்த மிழர் பேரவையின் மாநிலச் செயலாளர் வி.சி.கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற் றினார். இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கட்சி களின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கு பெற்றனர்.