மதுரை, ஜன.29- கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இன் றைய பிரதமர் நரேந்திரமோடி இருந்த போது முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக கலவரம் ஏற்பட் டது. இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஆவணப் படத்தை வெளியிட்டது. இதனை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது சமூகவலைத்தளங்க ளுக்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு அரசியல் கட்சியினர்,பல்வேறு அமைப்பினர் தடை விதித்த னர். இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஞாயி றன்று மாலை ஆவணப்படம் திரையிடப்படும் என அறி விக்கப்பட்டது.இதைதை தொடர்ந்து இந்த பகுதியில் நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். உரிய அனுமதி பெற்று திரையிட காவல்துறை அறி வுறுத்தியதை தொடர்ந்து இன்று (திங்கள்) திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுக் கப்பட்டுள்ளது. திரையிட அனுமதி மறுக் கப்பட்டால் அனுமதியை மீறி ஆவணப் படம் திரையிடப்படும் என்று மனு அளித்த பின்னர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் டி. செல்வராஜ் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். பேட்டி யின் போது மாவட்ட பொருளா ளர் பாவேல் சிந்தன், பகுதிக்குழு செயலாளர் சுரேஷ், தலைவர் குரோனி செந்தில், சிபிஎம் பகு திக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார் ஆகியோர் உட னிருந்தனர்.