திருவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், அரிமா பள்ளித் தாளாளர் லயன் ஆர். வெங்கடாசலபதி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் எம்.பி.முருகன், துணை முதல்வர் எம்.திவ்யநாதன், ஒருங்கிணைப்பாளர் அறிவரசன், பயிற்றுநர்கள் நவீன்குமார், சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.