திருநெல்வேலி, மே 8- இராமனேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு முன்னாள் தலைவி இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசி ரியர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் பள்ளி மேலாண்மை குழு வின் புதிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தினார். இதில் தேர்தல் மேற்பார்வை யாளராக காரியாண்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சுந்தர குமார் கலந்து கொண்டார். தலைவராக பேச்சு தாய், துணைத்தலை வராக முத்து மகேஸ்வரி, உறுப்பினர்களாக சுபா சித்ரா, சுதா லெட்சுமி, இசைவாணி, முத்துச்செல்வி, பேச்சிமுத்து, பாக்கியராஜ் ஐகோர்ட் ராஜா, முனியசாமி, மூக்காண்டி ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். உள்ளாட்சி பிரதிநிதியாக முத்து கிருஷ்ணன் மற்றும் பேச்சியம்மாள் கல்வி யாளர்களாக இல்லம் தேடி கல்வியின் தன் னார்வலர் சிந்து ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இல்லம் தேடி கல்வியில் நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தன்னார் வலராக பணிபுரியும் முத்துலட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் உள்ளாட்சி பிரதி நிதியுமான முத்துகிருஷ்ணன் உள்ளாட்சி அமைப்பு பள்ளிக்கு செய்யக்கூடிய பல்வேறுவிதமான வேலைகள் குறித்து விவரித்துக் கூறினார். பள்ளி உதவி ஆசி ரியை பெருமாள் குமாரி நன்றி கூறினார்.