மதுரை, ஜன.18- மதுரை மலபார் கோல்டு நிறுவனம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரை நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் புதனன்று நடை பெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட கல்வி அலுவலர் கே. கார்த்திகா முன்னிலை வகித்தார். சு.வெங்க டேசன் எம்.பி., மதுரை மலபார் கோல்ட் விஷால் டி மால் துணைத் தலைவர் நிஷாந்த், மேலமாசி வீதி கிளை துணைத் தலைவர் ஷிஹாபுதீன் ஆகியோர் மாணவி களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினர். 214 மாணவி களுக்கு ரூ.19 லட்சத்து 14 ஆயிரம் உத வித்தொகையாக வழங்கப்பட்டது. ஓசிபிஎம் பள்ளி தலைமை ஆசிரியர் என். மேரி நன்றி கூறினார்.