districts

img

திண்டுக்கல் புத்தகத் திருவிழா கருத்தரங்கில் உரையாற்றிய பள்ளிக்குழந்தைகள்

திண்டுக்கல், அக்.8-  திண்டுக்கல் புத்தகத் திரு விழாவில் சனிக்கிழமை அன்று  காலை நடைபெற்ற கருத்தரங்கத் தில் “வாங்கினேன் வாசித்தேன் சொல்கிறேன் “என்ற தலைப்பில் குழந்தைகள் பங்கேற்று பேசினர். எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் நினைவு மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இலக்கிய களத்தின் சார்பாக பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அருண்ராஜ் வரவேற்றார். வனிதா, குமணவேல், மாரியம்மாள், தாரகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செட்டி நாயக்கன்பட்டி அரசு பள்ளி  தலைமை ஆசிரியை கோ.சாந்தி,  வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற கந்தவேல், அம்மைய நாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை  நெறிப்படுத்தினர். பாலாஜி சுப்பிர மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். மாணவ மாணவியர்களை பாராட்டி தொழிலதிபர் எஸ்.கே.சி. குப்புசாமி பரிசுகளை வழங்கினார். பொறியாளர் முனியப்பன் நன்றி கூறினார்.

சிந்தனையரங்கம்

சிந்தனை அரங்கத்தில் கதை களும் கதை மாந்தர்களும் என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்ல துரை மற்றும் சிகரம் சிவந்திக்கு மட்டும் என்ற தலைப்பில் இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர் இளம் பகவத் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். எழுத்தாளர் சோலை  சுந்தர பெருமாள் நினைவு மேடை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய களத்தின் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித் தார். முனைவர் முத்துலட்சுமி வர வேற்றார். மாவட்ட வளங்கள் மற்  றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக சரவணன், துளிர் இலக் கிய நண்பர்கள் குழு நிறுவனர் முக மது யூசுப் அன்சாரி, எஸ் எம் பி எம் பள்ளி குழும நிர்வாகிகள் தர்ம ராஜன், அன்பரசன், அருண் பாலாஜி,வெங்கடேசன், சுவாமி நாதன், லக்சர் வேர்ல்ட் பள்ளி செய லாளர் சுவாமிநாதன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீர மார்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, மாவட்ட நூலகர் சரவணகுமார், எஸ் எம் பி எம் பள்ளி தாளாளர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர் மகா லட்சுமி நன்றி கூறினார்.

புத்தகத் திருவிழாவில் இன்று

அக்டோபர் 9 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை சிந்தனை அரங்க நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தமிழ்நாடு அரசு ஜவுளி துறை ஆணையருமான முனைவர் மா. வள்ளலாரின்  திண்டுகல்லில் எழு திய வரலாறு என்ற நூல் வெளியி டப்படுகிறது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி  ஆர். மகாதேவன் நூலை வெளியிடு கிறார். முதல் பிரதியை பெற்றுக் கொண்டு முன்னாள் மாநிலங்க ளவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் சிறப்புரையாற்றுகிறார்.