திருவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் சத்யா வித்யாலயா (சிபிஎஸ்இ) மேல்நிலைப்பள்ளியில் ஒரு நாள் தலைமை நிர்வாகியாக பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் எம். ஜெய கார்த்திக் பொறுப்பேற்று செயல்பட்டார் . பள்ளி குழும தலைவர் குமரேசன் மேனேஜிங் டிரஸ்ட் டாக்டர் சித்ரா குமரேசன், துணை நிர்வாகி அரவிந்த் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினனர். பள்ளி முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சௌந்தரபாண்டி என்ற சௌந்தரி ,ஆலோசகர் பாரதி நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார் .