திண்டுக்கல், ஜன.4- ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 மாதமாக முறையாக சம்பளம் வழங்காத அதிகாரிகளைக் கண்டித்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து அதிகாரிகளுடனான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திண்டுக்கல் ரெட்டியார்சத்தி ரம் ஒன்றியத்தில் வேலை பார்க்கும் சத்துணவு ஊழியர் களுக்கு கடந்த 3 மாதமாக 31 ஆம் தேதி வழங்க வேண்டிய சம்பளப்பணத்தை 20 நாட்கள் கழித்து வழங்கி வந்தனர். இது தொடர்பாக சத்துணவு அதி காரிகளிடம் பல முறை முறை யிட்டும் சம்பளம் வழங்க இய லாத நிலை. இதனையடுத்து செவ்வாயன்று மாலை ரெட்டி யார்சத்திரம் ஒன்றிய அலுவல கம் முன்பாக சத்துணவு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத்தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார் கலந்து கொண்டார். இதனையடுத்து புத னன்று ரெட்டியார்சத்திரம் ஒன் றிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாநி லச்செயலாளர் ஜெசி, மாவட்டத் தலைவர் பி.எம்.இராமு, மாவட் டச்செயலாளர் உள்ளிட்ட வட் டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி, வட்டார வளர்ச்சி அலு வலர் வேதா, சிவசுப்ரமணி (சத்து ணவு அதிகாரி) துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. வரும் மாதங்களில் மாதத்தின் கடைசிநாளில் ஊதி யம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (ந.நி.)