தேனி, டிச.5- ஓய்வூதியப்பலன்களை வழங்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். துப்புரவுத் தொழிலா ளர்களான தங்கவேல், சின்ன வேலுச்சாமி, லட்சுமி ஆகி யோர் தேனி மாவட்டம், ஆண்டி பட்டி ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்றனர். இவர்கள் பணி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகி யும் ஓய்வூதியம் மற்றும் பணப் பயன்கள் வழங்கப்பட வில்லை. இது குறித்து ஊரா ட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இந்த நிலையில், தங்க ளுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கவேல், சின்னவேலுச் சாமி, லட்சுமி ஆகியோர் தரை யில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். அங்கு பாது காப்பு பணியிலிருந்த போலீ சார், அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டதிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோரிக்கை குறித்து 3 பேரும் ஆட்சியர் க.வீ.முரளீ தரனிடம் தனித் தனியே மனு அளித்தனர்.