இராமநாதபுரம், நவ.6- இராமநாதபுரம் மாவட் டம் வாலிநோக்கத்தில் செயல் பட்டு வரும் அரசுக்கு சொந்த மான உப்பு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி சிஐடியு சார் பில் திங்களன்று காலவரை யற்ற வேலைநிறுத்தம், தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத் தின் பொதுச்செயலாளர் கே. வடிவேல் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, சங்க நிர்வாகிகள் முருகவேல் சாமியடியான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். உப்பு நிறுவன சங்க நிர்வாகிகள் அற்புத மணி, காட்டுராஜா, தனிராம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை தொடர்வது, நவம்பர் 7 அன்று வேலை நிறுத்தம், கருப்புக் கொடி ஆர்ப்பாட் டம் நடத்தி நிறுவனத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது, நவம்பர் 8 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்ட மும் கஞ்சி காய்ச்சும் போராட் டமும் நடத்துவது, நவம்பர் 9 அன்று வாலிநோக்கம் விளக்கு ரோட்டில் சாலை மறியல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.