districts

img

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்து ஊழியர்கள் தர்ணா

தூததுக்குடி, மார்ச் 5 எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரி வித்து மாநிலம் முழுவதும் தூத்துக் குடியில் ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. ஊழி யர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட கோட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கிளை தலைவர்கள் திருச்செந்தூர் சித்திரை, கோவில்பட்டி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தூத்துக்குடி ராமசாமி வரவேற் புரை ஆற்றினார். சிஐடியு மாநில செய லாளர் ரசல் துவக்கவுரை ஆற்றினார். ஐஎன்டியூசி மாநில செயல் தலைவர் கதிர்வேல், எச்எம்எஸ் பொதுச் செய லாளர் சத்யா, எல்பிஎப் ரவீந்திரன், அரசு ஊழியர் சங்கம் முருகன், ஏஐடி யூசி பாலசிங், ஏஐசிசிடியூ சிவராமன், முன்னாள் தொழிற்சங்க நிர்வாகிகள் தேவ பிரகாஷ், செந்தில்நாதன், ஜவ ஹர், பெத்துராஜ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கோட்ட இணைச் செயலாளர் பட்டன் நன்றி கூறினார்.