மதுரை, ஜூன் 14- மதுரை நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன் றிய பகுதிகளில் உள்ள கிராமங்க ளில் நடைபெறக்கூடிய திட்டப் பணி கள் மற்றும் 100 நாள் வேலை பணி களை மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் ஜூன் 13 அன்று ஆய்வு செய்தார். மஞ்சம் பட்டியில் துவங்கி சத்திரப்பட்டி, மாலைப்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, பெரியபட்டி, காவ னூர், கருவனூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து கொடிமங்கலத்தில் நிறைவடைந் தது. மஞ்சம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீகுப்பட்டி கிராமத்திற் கான பொது சுடுகாடு உள்ளது .இது ஓடை புறம்போக்கு என்று கூறப்படு கிறது. எனவே அதனை நிரந்தரமாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மஞ்சம்பட்டி யில் குடிநீர் பிரச்சனை என்று தெரி விக்கப்பட்டது. அதற்கு எம்.பி., அவர் கள் அதிகாரிகளிடம் என்ன செய்ய லாம் என்று கேட்டார். சீகுபட்டியில் நிரந்தர சுடுகாடு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
ஒரு மாதக் காலத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
மஞ்சம்பட்டியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரு கிறது. ஒரு மாத காலத்துக்குள் மக் கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றும் சீகுபட்டியிலும் குடிநீர் பிரச்சனையை போக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரு கிறது. விரைவில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்றும் எம்.பி., கூறினார். சீகுப்பட்டியில் சோலைஅழகு புரம் பகுதியில் மின்விளக்கு இல்லை என்று புகார் தெரிவித்த னர். உடனடியாக மின்வாரிய அதி காரிகளை அழைத்து விரைவில் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
விபத்தை தவிர்க்க
மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சத்திரப்பட்டி பிரிவிலிருந்து மஞ்சம்பட்டிக்கு செல்லக்கூடிய பாதையின் குறுக்கே தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. இந்த சாலை யை கடக்கும்போது அதிக விபத்து கள் ஏற்படுகின்றன. எனவே பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த எம்பி, மதுரை மாவட்ட அளவிலான திஷா கூட்டத்தில் இது சம்பந்தமாக ஏற்க னவே பேசியுள்ளோம். வருகிற 15ஆம் தேதி அன்று திஷா கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது அந்த கூட்டத்தில் இது குறித்து நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு விரைவில் உறுதியாக பாலம் அமைக்க ஏற்பாடு செய் வோம் என்று கூறினார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் சந்திப்பு
சத்திரப்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட கடவூரில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன் எம்.பி., முறையாக சம்பளம் வருகிறதா, வேலை வழங்கப்படுகிறதா என்று கேட்டார். விரைவில் கூலி 260 ரூபாய் வழங் கப்படும் என்று தொழிலாளர்களி டம் தெரிவித்தார். சத்திரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தொண்டமான பட்டியில் ஆக்கிரமிப்பு காரணமாக அரசுப் பேருந்து ஊருக்குள் வருவ தில்லை. நடந்து வந்து சத்திரப்பட்டி யில் தான் பேருந்து ஏறும் நிலைமை உள்ளது. எனவே பேருந்து உள்ளே வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு எம்.பி., போக்குவரத்துத் துறை அதி காரிகளை அழைத்து இதுகுறித்து ஆய்வு செய்து உடனடியாக பேருந்து உள்ளே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சத்திரப்பட்டி பள்ளியில் நமக்கு நாமே திட்டம் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் கட்டிடம் கட்டித்தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். சத்திரப்பட்டி பஞ்சாயத்து கல்லங்குத்தல் மயான கூரையை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைத்துத்தர டெண்டர் விடப்பட் டுள்ளது. விரைவில் பணி துவங் கப்படும் என்றும் வறிய நிலையில் உள்ள ஆறு பேருக்கு இந்த ஆண்டு ஆடு, மாடு வளர்ப்பதற்கான குடில் அமைத்துத் தரப்படும் என்று எம்.பி. கூறினார். சத்திரப்பட்டி விரிவாக்க பகுதி களில் தெருவிளக்கு இருந்தும் எரியவில்லை என புகார் அளித்த தற்கு அதிகாரிகளிடம் பேசி விட்டேன். மின் விளக்குகள் சரிசெய் யப்படும் என்று கூறினார்.
மீனாட்சிபுரத்திற்கு ரேசன் கடை
மாலைப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத் திற்கு புதிய ரேசன் கடை அமைத் துத்தரப்படும் அதிகாரிகள் முன்னி லையில் எம்.பி., உறுதி அளித் தார். மீனாட்சிபுரம் கிராமத்திற்கு என்ஆர் ஜி எஸ் திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் அமைத்துத்தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. காஞ்சரம்பேட்டை முதல் சின்னப்பட்டி வரை சாலை சின்னப்பட்டி முதல் காஞ்சரம் பேட்டை வரை கால்வாய் ரோடு அமைத்துத்தருமாறு கோரிக்கை வைத்தனர். நத்தம் தேசிய நெடுஞ்சாலை போடும்போது சுடுகாட்டை இடித்து விட்டனர். அதனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த எம்பி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி யிடம் கேட்டு தீர்வு காண்போம் என்று தெரிவித்தார். காஞ்சரம் பேட்டை முதல் சின்னப்பட்டி வரை அதிகாரிகள் சாலை அமைத்து தரு வதாக உறுதி அளித்துள்ளனர். விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
கருவனூர், உசிலம்பட்டி, கொடிமங்கலம் ஆகிய ஊராட்சி களில் மக்களை சந்தித்து குறை களை கேட்டறிந்தார். அதில் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினார். நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து, மஞ்சம்பட்டி ஊராட்சி மந்தையில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத்தரப்படும் என்றும் சத்திரப்பட்டியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தருவதாகவும் மாலைப்பட்டியில் பேருந்து நிறுத்த நிழற்குடையும், போர்வெல் அமைத்து தருவதாக வும் உறுதியளித்தார். பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாறைபட்டியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து தரு வதாக உறுதி அளிக்கப்பட்டது. காவனூர் ஊராட்சியில் நெற் கதிர் அடிக்கும் களம் அமைத்துத் தர உத்தரவாதம் அளித்தார். தேசிய நெடுஞ்சாலையில் கொடுமங்கலம் விலக்கில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் திருமலை, மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனபாய் , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) உலகநாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலு வலர்கள், ஊராட்சித் தலைவர்கள், செயலர்கள் , மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உமாமேகஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந் தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.எஸ்.ஜெக நாதன், எஸ்.நாகராஜன், கே.முரு கேசன் கே.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.