districts

img

நாவினிபட்டி பள்ளியில் சு.வெங்கடேசன் எம்.பி.ஆய்வு

மதுரை டிச 30-  மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டியில் நூற்றாண்டை கடந்த அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.  இந்தநிலையில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் வரை யில் சாலை விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகின்றது. சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டும் பணி நாவினிபட்டி கிராமத்தில் நடைபெறுகின்றது. நாவினிபட்டியில் சாலையோரம் அரசு பள்ளி உள்ள தால் சுமார் 4 அடி உயரம் வரை வடிகால் கட்டப்பட்டு மாற்று வழி ஏதும் செய்து தரப்படாமல் இருந்தது. அத னால் மாணவர்கள் ஏறிக்குதித்து பள்ளிக்குள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில மாணவர்கள் மாற்றுவழியில் அலைந்து பள்ளிக்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதனால்  மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகின்றது. இதனால் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இதனை நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது செய்தி ஒளிப்பரப்பில் பார்த்த மதுரை மக்களைவை உறுப்பினர் சு.வெங்கடேசன், உடனடியாக அங்கிருந்து தொலைபேசியில் நெடுஞ்சாலை துறை அதி காரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதனை  தொடர்ந்து அதிகாரிகள் உயரத்தை குறைத்து  மாண வர்கள் செல்ல வழி ஏற்பாடு செய்தனர். அந்த பள்ளி யினை வெள்ளியன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது உடன் அதிகாரிகள், ஊராட்சி தலைவர் இருந்தனர்.  அவர்கள் பள்ளியின் இடது புற தெரு வழியாக மாற்று பாதை வைக்கலாம் என்று கோரிக்கை வைத்தனர்.  கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் தாலுகாக்  குழு உறுப்பினர்கள் எஸ். பி.மணவாளன், வி.அடக்கி வீரணன், மேலூர்  நகர் மன்ற தலைவர் யூ.முகமது யாசின், துணைத் தலைவர் இளஞ்செழியன், மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.