மதுரை, மார்ச் 27- “மதுரையில் வைகை நதியை வணங்கி; வெற்றி முகம் காட்டி... வீர நடைபோட்டு...” தனது வாக்குச்சேக ரிப்பை புதனன்று தொடங்கினார் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன்.
திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சி களின் ஆதரவு; இந்தியா கூட்ட ணியை ஆதரிக்கும் மாணவர், வாலிபர் பலத்தோடு மதுரையின் குறியீடாய், மதுரை வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் மதுரை மக்களவை உறுப்பி னரும் 18-ஆவது மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சு.வெங்கடேசன் புத னன்று காலை 7.10 மணிக்கு வைகை நதியில் மலர் தூவி, நதியை வணங்கி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வேட்பாளரைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி, மாநகர் மேயர் இந்திராணி, துணை மேயர் டி.நாகராஜன் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநா தன் (மதிமுக), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட தோழமைக்கட்சியினர் வைகை நதியில் மலர் தூவினர்.
தொடர்ந்து காலை 7.15 மணிக்கு திருமலை ராயர் படித்துறை செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்த வீரலெட்சுமி, ஈஸ்வரி. மனோரஞ்சிதம் ஆகியோர் ஆரத்தி எடுத்து வெற்றித்திலகமிட்டு “நீங்கள் வெற்றி பெறுவது உறுதி” என வாழ்த்தி வழியனுப்பினர்.
காலை 7.25 மணிக்கு மதுரை சிம்மக்கல் தைக்கால் காசிவிஸ்வநாதர் கோவிலில் வாக்குச் சேகரிப்பு தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது. கோ.தளபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
கோ.தளபதி பேசுகையில், ‘‘மதுரை யின் குரலை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொ லித்தவர் சு.வெங்கடேசன், மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டுவந்த வர்களில் முக்கியப் பங்காற்றியவர். மாண வர்களுக்குக் கல்விக் கடன் வழங்கியவர் சு.வெங்கடேசன்’’ எனப் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய வேட்பாளர் சு.வெங்கடேசன், ‘‘திமுக உள்ளிட்ட தோழ மைக்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணி மதுரை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மகத்தான வெற்றி பெறும். மதுரையில் வைகை நதி ஓடிய தால் அதையொட்டி கரையின் ஓரத்தில் ஒரு நகரம் உருவாகியுள்ளது. அந்தக் கரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர். மதுரை சமயச் சார்பற்ற வளர்ச்சியின் அடையாளம். நாங்கள் செய்த சாதனை கள், செய்யப்போகும் சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரிப் போம். தேர்தலில் பாசிச பாஜக-வை வீழ்த்தி நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்’’ என்றார். காலையில் தைக்காலில் துவங் கிய பிரச்சாரம் வடக்கு-மேலமாசி வீதியில் நடைபெற்றது.
மதுரையிலும் தமிழ்நாட்டிலும் சரித்திரம் படைப்போம்!
சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழக்கம்
பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘2019-நாடாளுமன்றத் தேர்தல், 2021-சட்டமன்றத் தேர்தல், தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நமது அணி மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு (2024) மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சரித்திரச் சாதனையை நிகழ்த்த உள்ளது. 10 சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் நம்மோடு சேர்ந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடக்கின்றன. புதிய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழித்த பாஜக-விற்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் தேர்தல் இது’’ என்றார்.
சொன்னதைச் சொல்கிறோம்...
ஆயிரம் ரூபாய் கேஸ் வாங்கப் பயன்படுகிறது
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் புதனன்று காலை பிரச் சாரத்தை நிறைவு செய்தார். திரும்பி வரும் போது புதுஜெயில் ரோடு பகுதியில் 67 வயது நிரம்பிய ஒருவர் முரட்டம்பத்திரி அருகில் இட்லி வேகவைத்த பாத்தி ரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம் தேர்தல் குறித்து பேசினோம். அப்போது அவர் கூறுகையில்,‘‘என் பெயர் காந்திமதி. வயது 67. 20 வயது முதல் தவறாமல் ஓட்டுப்போடுகிறேன். விலைவாசி இப்போது உயர்ந்து விட்டது. ஸ்டாலின் ஐயா மாதம் மாதம் ரூ.1,000 தருகிறார். அது சிலிண்டர் வாங்க பயன்படுகிறது. மோடி கேஸ் மானியத்தை நிறுத்திவிட்டார். ஸ்டாலின் ஐயா, பள்ளிக்கூடத்துப் பிள்ளைக ளுக்குச் சாப்பாடு போடுகிறார். இதையெல்லாம் பாராட்டத்தான் வேணும். என்றார்.
பிரச்சாரத்தில் அணி வகுத்த தலைவர்கள்
புதனன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழுச் செயலாளர் பி.ஜீவா, திமுக வட்டச் செயலாளர் ராஜேந்திரன், காமராஜ், அசோக்குமார், பகுதிச் செயலாளர்கள் சரவண பாண்டி, சுப.கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மண்டலத் தலைவர்கள், காங்கிரஸ் மாவட்ட தலை வர் கார்த்திகேயன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.ரவிக்குமார் மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மண்டலச் செயலாளர் அழகர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காமராசர் பல்கலை. கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும்
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் சூர்யா. மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகக் கூறினார். முதலில் நாம் எந்தக் கல்லூரி என்ற கேள்வியை எழுப்பவில்லை. தேர்தல் நிலவரம் குறித்துக் கேட்டதற்கு,எனக்கு வேட்பாளர் வெங்கடேசனைத் தெரியும். அவருடன் புகைப்படம் எடுத்துள்ளேன் என்றார். எனக்கு இப்போதுதான் 18-வயதாகிறது. நான் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவில்லை.ஆனால் நான் சொன்னால் என் அப்பா, அம்மா ஆகியோர் சிபிஎம்- மிற்கு வாக்களிப்பார்கள் என்றார். சரி, நீங்கள் வேட்பாளரிடம் சொல்ல விரும்பும் கோரிக்கை ஏதாவது உண்டா எனக் கேட்டதற்கு, ‘‘ஆம், நான் படிக்கும் காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும். இது என் கோரிக்கை மட்டுமல்ல... அனைத்து மாணவர்களின் கோரிக்கையும் இதுதான்’’ என்றார்.