districts

img

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜன.22- நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டல அலு வலகம் முன்பு சிஐடியு சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கீவலூரில் அருந்ததிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சனிக்கிழமையன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா சங்க மாவட்ட பொ ருளாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் துவக்கி வைத்தார். சிபிஎம் நெல்லை தாலுகா செய லாளர் நாராயணன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், கவுரவ தலைவர் வரகுணன், ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.முருகன், மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் கருணா, மாரியம்மாள், கனகம் மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், திரு வண்ணாமலை மாவட்டம் கலச வாக்கம் தாலுகா கீவலூர் கிரா மத்தில் அருந்ததிய மக்கள் மீது ஆதிக்க ஜாதியை சேர்ந்த குண்டர்கள் கடுமையான தாக்கு தல் நடத்தி வீடுகளை சூரையாடி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அருந்ததிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும், சேதமான பொருட்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவார ணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.