மதுரை, ஜூன் 9- வைகாசி விசாகத்திற்கு திருச்செந் தூர், பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஜூன் 12 அன்று வைகாசி விசாகத் திருவிழா. அன்றைய தினம் திருச் செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய் வார்கள். அன்றாட பயணி வண்டி களில் கோடைகாலம் ஆதலால் இடம் போதாது. எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம் இயக்கிட பொது மேலா ளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு சிறப்பு ரயில்; பழனியில் இருந்து திருச்செந்தூ ருக்கு திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்; செங்கோட்டை யிலிருந்து திருச்செந்தூருக்கு திரு நெல்வேலி வழியாக சிறப்பு ரயில்; செங்கோட்டை திருநெல்வேலி பயணி வண்டியை நீட்டித்து இயக்கிட வேண்டும்; செங்கோட்டையிலிருந்து பழனிக்கு மதுரை வழியாக பயணி சிறப்பு ரயில் இயக்க வேண்டும்; செங்கோட்டை மதுரை பயணி வண்டி யை நீட்டிப்பு செய்து இதனை இயக்க வேண்டும். மேற்கண்ட வழித்தடத்தில் சிறப்பு இரயில்களை இயக்கிட பொது மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.