திண்டுக்கல், டிச.28- ரெட்டியார்சத்திரம் ஒன்றி யம் பலக்கனூத்து ஊராட்சி பகுதியில் உள்ள சக்தி கல்லூ ரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் மதநல்லிணக்கத்தை பேணு கிற ஒரு அமைதியான மாவட் டம். இங்கு மத வேறுபாடு களுக்கு இடமில்லை. ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளுக்கான பயிற்சி முகாம்களை பள்ளி கல்லூரி களில் நடத்துவது சரியல்ல. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இது போன்ற பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு களின் சாகா பயிற்சிக்கு அனு மதிக்கக்கூடாது. திண்டுக் கல் மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். நடவடிக்கை எடுக்காத நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக சம்மந்தப்பட்ட கல்வி நிறு வனம் முன்பாக மறியல் உள் ளிட்ட போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார். டிச.30 இல் பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் சக்தி கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சி முகாம் நடைபெற்று வருகி றது. ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெரியாரிய அமைப்புகள் திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளன.
ஒரு கல்லூரி நிர்வாகம் என் றால் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்புக்கும் கூட்டம் நடத்தவோ. பயிற்சி அளிக்கவோ அனுமதிக் கக்கூடாது என்பது பொது வான விதியாகும். ஆனால் சக்தி கல்லூரி நிர்வாகம் அந்த விதியை மீறி ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்பு நடத்தும் சாகா பயிற்சி முகா மிற்கு அனுமதி அளித்துள் ளது. அனைத்து மதத்து மாணவ, மாணவியர்கள் படிக்கும் இது போன்ற கல் லூரியில் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சி அளிக்க அனு மதிக்கக்கூடாது என்று கூறி யும் கண்டனம் தெரிவித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகம். திராவிடர்கழகம். தமி ழர் சமூகநீதிக்கழகம், தமிழ் புலிகள் என பல்வேறு பெரி யாரிய தலித்திய அமைப்பு கள் சார்பாக டிசம்பர் 30 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழனி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.யிடம் புகார் இந்த பிரச்சனை தொடர் பாக திமுக கிழக்கு மாவட் டச்செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் மாவட் டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் அலைபேசி யில் புகார் தெரிவித்துள்ளார். ஆத்தூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதியில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நடவ டிக்கை எடுப்பதாக மாவட்டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் தெரி வித்துள்ளார். (ந.நி.)