தூத்துக்குடி, பிப்.26- கோவில்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண நிதியுதவியை கனிமொழி எம்.பி., வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் ராமர், ஜெயராஜ், கண்ணன், தங்கவேல் ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்த னர். இந்நிலையில், 4 தொழிலா ளர்கள் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவர்க ளது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படுவதாக தெரி வித்தார். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர்.