districts

img

பண்டைய மக்களின் வாழ்வியல் முறையை சொல்லும் பாறை ஓவியங்கள்

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, கல்லாபுரம் அருகே மதகடிப்புதுர் மலையில்  சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாக மலை பகுதி யில் மக்கள் வாழ்வியலை விளக்கும் வகையில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள் ளன.  இங்கு ஓவியங்களில் பண்டைய கால மனிதர்கள் மலைக்குகைகளில் இனக்குழு வாக வசித்து வந்ததற்கான சான்றுகளும்,  சைகை குறியீடுகள் மூலம் தங்களின் மகிழ்ச்சி,  சோகம் மற்றும் வீரத்தை உணர்த்தும் வகையில் இந்த பாறை ஓவியங்கள் உள்ளன.  மேலும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒற்றுமையாக மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தும் நடனம், வேட்டை முறை, சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்பட்ட  ஆபத்துக்களை குறியீடுகள் மூலம் எச்சரிக்கும் ஓவியங்களும் உள்ளன.   இவ்வகை ஓவியங்கள் உள்ள பகுதியை  தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். ஓவியங்கள் இருக்கும் மலை அருகே உள்ள ஜம்புக்கல்மலை பகுதியில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக தகவல்கள் வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மதகடிப்புதூர் பாறை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். - கே.மகாதேவன்