districts

img

வெண்டர் கமிட்டி உறுப்பினர் தேர்தலை தள்ளி வைத்திடுக!

திருநெல்வேலி,அக்.27- சிஐடியு நெல்லை மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு  வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது - நாங்கள் வடக்கு ரத வீதி,கீழரதவீதி ,மேலரத வீதி பகுதியில் சாலையோர வியா பாரம் செய்யும் வியாபாரி கள். நாங்கள் இந்த பகுதி யில் சுமார் நூற்றுக்கும் மேற் பட்டோர் நபர்கள் வியாபா ரம் செய்கிறோம். நாங்கள்  மாநகராட்சியில் முறையாக பதிவு செய்துள்ளோம். எங்க ளில் சில வியாபாரிகளுக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்பட வில்லை. சிஐடியு பொது தொழிலாளர் சங்கம், மாநகர சாலையோர வியாபாரிகள் சங்கத்திற்கு வெண்டர் கமிட்டி உறுப்பினர் தேர் தல் சம்பந்தமாக முறை யான தகவல் எதுவும் எழுத்து  மூலமாக  தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் காலத்தை ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்கி சங்கங் களுக்கு முறையாக தகவல் தெரிவித்து இந்த சாலை யோர வியாபாரிகளுக்காக தேர்தலை ஜனநாயகப் பூர்வ மாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  மனு கொடுக்கும் போது  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மோகன், மாவட்டச் செயலாளர் ஆர். முருகன்,மாவட்ட பொருளா ளர் ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர். முன்ன தாக இதே கோரிக்கைகளை  வலியுறுத்தி மாநகராட்சி மேயரிடம் மனு கொடுத்த னர்.