districts

img

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் அபாய நிலையில் சாலையோர மரங்கள்

திண்டுக்கல், டிச.9- கொடைக்கானல் மலை பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் மிகவும் முக்கியப்பகுதியாக உள்ளது வெள்ளி நீர் வீழ்ச்சியாகும். இந்த அருவியின் அருகில் சென்று ஏராள மான சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை ரசிப்பார்கள். அப்பகுதியில் சிறு வியாபாரிகள் கடை அமைத்து வியாபா ரம் செய்து வருகிறார்கள். சிறு வியாபாரிகள் கடை வைத்துள்ள பகுதியில் உள்ள சில மரங்கள் மண் அரிப்பு காரணமாக விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவியாபாரிகள் எப்போதும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வியாபாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வியாபாரிகளுக்கு மட்டுமல்ல சுற்றுலா பயணிகளுக்கும் இந்த மரங்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.  இது தொடர்பாக அப்பகுதி சிறு வியாபாரிகள் அரசுஅதி காரிகளிடம் பல முறை மனுக் கொடுத்தும் அந்த மரங்களை அகற்ற  முன்வரவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த மரங்கள் குறித்து ஆய்வு செய்து விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த  வேண்டும் என்றுஅப் பகுதி சிறு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். (நநி)