இராமநாதபுரம்,ஏப்.29- இராமநாதபுரம் மாவட் டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் புதிய சாலைகள் விரிவாக் கப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர், போகலூர் ஊராட்சி ஒன்றி யம் எட்டி வயல் முதல் இதம் பாடல் வரை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ.17. 5 கோடி மதிப்பீட்டில் இடைவெளி தடத்திலிருந்து இருவழி அகலப்படுத்தும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு பணிகளை காலதாமதம் இன்றி முடித்திட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறுகை யில், இராமநாதபுரம் மாவட் டத்தில் நடப்பு ஆண்டிற்கு நெடுஞ்சாலை துறையின் மூலம் 28 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60. 300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணிக ளுக்காக ரூ.13,100 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள் ளது
.இதன் மூலம் இரு வழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துகள் நடைபெறும் பகு தியை கண்டறிந்து சாலை களை நேர்படுத்தும் பணி போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. மேலும் இதுவரை 19 பணி கள் 49.470 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் அமைக் கும் பணி முடிக்கப்பட்டுள் ளது. நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக் கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணி களை சீர் செய்வதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப் பயனுள்ளதாக இருப்பது டன் அதிகமாக விபத்துக்கள் நடைபெறக்கூடிய பகுதி ளை கண்டறிந்து தொழில் நுட்ப முறையுடன் வடிவ மைக்கப்பட்டவுடன் விபத்து கள் தவிர்க்கப்படுகின்றது. இதுவும் வாகன ஓட்டிக ளுக்கு பாதுகாப்பு வசதி யாக அமையக் கூடியதா கும். இதே போல் நடப்பாண் டிற்கு பொதுமக்களின் தேவையை அறிந்து கூடுத லாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்து தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரி வித்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலை மண்டல பொறியாளர் சந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி, பரமக்குடி வட்டாட் சியர் ரவி உட்பட அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.