இராமநாதபுரம், மார்ச் 25- வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பணி யாற்றக்கூடிய தொழிலா ளர்களுக்கு பணிக்கொடை சட்டப்படி 15 நாள் பணிக் கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட் டம் வாலிநோக்கத்தில் இயங்குகிற தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் 1975 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞ ரால் வேலைவாய்ப்பை வழங்கு வதற்காக உருவாக்கப்பட் டது. துவங்கப்படுகிற போது பருவ கால தொழிற்சாலை என்பதாக காரணம் காட்டி பணிபுரியும் தொழிலாளர் களுக்கு 7 நாள் மட்டுமே பணிக்கொடை வழங்கப் பட்டு வந்தது தொழிற்சங்கம் சார்பில் 15 நாட்கள் பனிக் கொடை சட்டத்தின் படி பணிக்கொடை கணக்கிட்டு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப் பட்டது.
சர்க்கரை ஆலையும் பருவகால தொழிற்சாலை தான். அங்கு பணிபுரியும் தொழி லாளர்களுக்கு 15 நாள் பணிக்கொடை வழங்கும் அரசாணை நகலை முன்னு தாரணமாகக் கொண்டு அரசு உப்பு நிறுவன தொழிலா ளர்களுக்கும் 15 நாள் பணிக் கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 24 அன்று சங்கத் தலைவர் கே.பச்சம்மாள் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, அரசு உப்பு நிறுவன தொழிற்சங்க செயலாளர் வி. குமரவடி வேல், பொருளாளர் எஸ்.முருகேசன் ஆகியோர் பேசி னர். நிர்வாகிகள் காட்டு ராஜா, முருகவேல், அற்புத மணி வடிவேல் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி பேசுகை யில், மே மாத இறுதிக்குள் 15 நாள் பணிக்கொடையை அரசு உப்பு நிறுவன நிர்வா கம் ஏற்றுக் கொண்டு உத்த ரவு வழங்கவில்லை என்றால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வேலைநிறுத்தம் செய்து, 500 தொழிலாளர்களுடன் சென்னை தலைமை அலு வலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இத்தனை ஆண்டுகளாக அரசு உப்பு நிறுவன நிர்வா கம் பல்வேறு காரணங்களை காட்டி 15 நாள் பணிக் கொடை வழங்க மறுப்பதை கைவிட்டு, பணிக்கொடை சட்டத்தின் படி 15 நாள் பணிக் கொடையை அரசு உப்பு நிறு வன தொழிலாளர்கள் அனை வருக்கும் வழங்கிட முன்வர வேண்டுமென வலியுறுத்தி னார்.