districts

img

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் அரசியல் பேசட்டும்!

விருதுநகர், மே.13- தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜி னாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும் என்று மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாமேதை காரல்மார்க்ஸ் பிறந்த தினம், கட்சியின் நிதியளிப்பு மற்  றும் மேதின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மதுக்கூர் ராமலிங்கம் கூறியதா வது: கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் சேர்வதற்கு மிக  முக்கிய காரணமாக இருந்தவர்  மார்ஷல் நேசமணி. நீதிமன்ற ஓய்வ றையில் வழக்கறிஞர்களுக்கு சாதி ரீதியாக இரு பானைகளில் தண்ணீர்  வைக்கப்பட்டிருந்தது. அதை உடைத்து எறிந்தார். பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என  சனாதனம் கூறியது. இதனை எதிர்த்து முத்துக்குட்டி சுவாமிகள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி னர்.

அப்போராட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசானது, கௌதம் அதானி, அம்பானி சகோதரர் களுக்காக உள்ளது. எல்.ஐ.சி,  பாரத ஸ்டேட் வங்கி பணத்தை  எடுத்து அதானிக்கு கொடுத்துள்ள னர். கார்ப்பரேட்டுகள் கொள்ளை யடிப்பதற்கான அரசாக பாஜக உள்  ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசி யல் சாசன பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேச வேண்டும். தொழிலாளர்களிடம் நிதி திரட்டி  வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. எனவே, எப்போதும் தொழிலாளர்களுக்கு ஆதரவா கவே இருக்கும். பட்டாசு, அச்சு  உள்ளிட்ட சிறு,குறு தொழில்களை பாதுகாக்க தொடர்ந்து போராடி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.  முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியகுழு உறுப்பி னர் கே.ஆரோக்கியராஜ் தலை மை தாங்கினார். தெற்கு ஒன்றிய  செயலாளர் பி.நேரு வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.தாமஸ், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்  டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டி யன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  முடிவில் முத்துமுனியாண்டி நன்றி கூறினார். முன்னதாக குழந்தை களின் கலை நிகழ்ச்சி நடைபெற் றது.