districts

மதுரை முக்கிய செய்திகள்

சிவகாசி அருகே தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட நாய் சடலம் மீட்பு

சிவகாசி, பிப்.7- சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப் பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் வீசப்பட்ட நாயின் சடலம் மீட்கப்பட்டது. சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள மேல்நிலைநீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்திட ஊராட்சிமன்ற ஊழியர் சென்ற போது, அதில் இறந்த நிலையில் நாயின் சடலம் கிடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில்,  அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அய்யனார் சற்று மனநிலை பாதிக்கப் பட்டவர் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரி வித்துள்ளனர்.

தேனியில் குடும்ப பிரச்சனையில்  இருவர் தற்கொலை 

தேனி, பிப்.7- குடும்ப பிரச்சனை காரணமாக கூடலூர், ராயப்பன் பட்டியில் இருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது . தேனி மாவட்டம், கூடலூர் 14வது வார்டு ரைஸ் மில்  தெருவை சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது  35). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார்.  இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததால் அவ்வப்போது கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில்  விசாரித்து வரு கின்றனர். ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண் டன்பட்டியைச்  சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் மகன் முகிலன்  (25). இவரது தாய் இறந்துவிட்டதால் தந்தை 2வது திரு மணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வரு கிறார். முகிலன் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை  கண்டித்து வந்தார். இந்நிலையில் முகிலன் தனது வீட்டில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்ப வம் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில்  விசா ரித்து வருகின்றனர்.

பாம்பு கடித்து  கல்லூரி மாணவன் பலி 

தேனி, பிப்.7- தேனி அருகே பாம்பு கடித்து கல்லூரி மாணவன் பலி யான சம்பவம் வடபுதுப்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி அருகே வடபுதுப்பட்டி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சரணவன் மகன் சதீஸ்குமார் (20). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் முதலா மாண்டு படித்து வந்தார் .இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி  வடபுதுப்பட்டி கோம்பைக்  காடு கண்மாய் அருகே  மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருந்த போது பாம்பு  கண்டித்துள்ளது . உறவினருடன் இரு சக்கர வாக னத்தில் சென்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை  பலனளிக்காமல் திங்கள்கிழமை காலையில் சதீஸ்குமார் உயிரிழந்தார். இது குறித்து சதீஸ்குமார் தந்தை சரவணன் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அல்லிநகரம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

குமுளியில்  17 டன் ரேசன் அரிசி சிக்கியது 

தேனி, பிப்.7- குமுளி சோதனைச் சாவடியில் கேரளாவிற்கு கடத்த  இருந்த 17 டன் ரேசன் அரிசி பிடிபட்டது. தமிழக-கேரள எல்லையான குமுளியில் உள்ள தமி ழக காவல்துறை  சோதனைச்சாவடியில் உத்தமபாளை யம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்  ஆய்வாளர்  சுப்புலட்சுமி தலைமையில் வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து குமுளி நோக்கி வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.  இதில், அந்த லாரியில் 50 கிலோ வீதம் 340 மூட்டை களில் மொத்தம் 17 டன் ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான  கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜான் பாட்ஷா (வயது 33), உடன் வந்த மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த  சீனிவாசன் (54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த னர். மேலும் லாரி மற்றும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பாலசிங் என்பவரை தேடி வருகின்றனர்.

பூட்டிய கடையில்  செல்போன், பணம் கொள்ளை

சிவகாசி, பிப்.7- சிவகாசியில் பூட்டிய கடையில் செல்போன், பணம் திருடு போனது. சிவகாசி சாரதா நகரை சேர்ந்த செய்யது அபுதாகிர் என்பவருக்கு சொந்தமான கடை  திருத்தங்கல்  சாலை யில் உள்ளது. இங்கு எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர் மற்றும் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், வழக்கம் போல திங்களன்று  இரவு  விற்பனை முடிந்ததும் ஊழியர்கள்   கடையை பூட்டிச்சென்ற னர். மறுநாள் காலை வந்து பார்த்த போது, கடை யின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. மேலும்,  கடை யினுள்  இருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம்  மற்றும்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள  செல்போன்  களும் திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து  போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. விரைந்து வந்த சிவகாசி   துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் நேரில் விசாரணை நடத்தினார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிப்படி    சின்னமனூரில் மதுக் கடையை இடமாற்றம் செய்க!

தேனி ஆட்சியரிடம்  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

தேனி, பிப்.7- சின்னமனூரில் வணிகர் -பொதுமக்க ளுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை ,தேனி மாவட்ட நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிப்படி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் தேனி ஆட்சியர்  ஆர்.வீ.ஷஜீவனாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முரு கன், சின்னமனூர் ஏரியா செயலாளர் கே.எஸ்.  ஆறுமுகம், நகர் பொறுப்பாளர் மணி கண்டன் ஆகியோர்  தேனி ஆட்சியர் ஆர்.வீ. ஷஜீவனாவை நேரில் சந்தித்து மனு அளித்த னர். அந்த மனுவில்  தெரிவித்துள்ளதாவது: சின்னமனூரில் நகரத்தின் மைய பகுதி யான எள்ளு கடை தெருவில் 8547-அரசு மது பான கடை செயல்படுகிறது. இந்த சாலை யில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பள்ளிக்கூடம்,பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் கோவில் உள்ளன.  விவசாய நிலங்  களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. டாஸ்மாக் கடையை ஒட்டி கோவிலும் கடை யின் முன் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலமும், அதனுள்ளே ஆரம்பப்  பள்ளி கூடம்  செயல்பட்டு வருகிறது இந்த பிரதான சாலையில் உள்ள டாஸ்  மாக் கடையை இடமாற்றம் செய்திட கோரி  கடந்த 12-9-22 அன்று கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையை 3- மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதாக வட்டாட்சியர் மற்றும் டாஸ்  மாக் மேலாளர் ஆகியோர்  எழுதிக் கொடுத்த னர். மேலும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்திட கோரி நினைவூட்டல் மனு  கொடுக்கப்பட்டது. ஆனாலும் டாஸ்மாக் கடை மாற்றாததால் கடந்த மாதம்  18 ஆம்  தேதி கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பி னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி தலைமையில்  காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து ஜனவரி 19 ஆம்  தேதி மாவட்ட ஆட்சியர்  மற்றும் டாஸ்மாக்  மேலாளர் ஆகியோருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் 15-நாட்களுக்குள் கடையை இடமாற்றம் செய்ய  உறுதியளித்தனர்.இன்று வரை கடையை இடமாற்றம் செய்ய வில்லை. எனவே பெண்கள் மற்றும் பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள சின்னமனூர் 8547- டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்  அமைச்சர்- பழனி எம்எல்ஏ நடவடிக்கை

சின்னாளப்பட்டி, பிப்.7- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த குளத்துப்பட்டியில் செயல்பட்டுவரும் அரசு மகளிர் கலைக்  கல்லூரியில்  நிலக்கோட்டை மற்றும்அதனை சுற்றியுள்ள  கிராமங்களிலிருந்தும்  திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து  1500-க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தினமும் காலை மாலை என ஒரே  நேரத்தில் அனைத்து மாணவிகளும் வந்து செல்லும் நிலை யால் அனைத்து மாணவிகளையும் ஒரே நேரத்தில்  ஏற்றிச்செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்தில் கூட்டம் கூட்டமாக சென்றனர், பலர்  வெகுநேரம் காத்திருந்தும் சிலர் பாதுகாப்பின்றி நடந்து சென்றும் வருவதாக பெற்றோர்கள் கவலையுடன் தெரி வித்தனர்.  இதையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி. செந்தில்குமார் பரிந்துரையின் பேரில் உடனடியாக ஊரக  வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாணவி களுக்கென கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க  உத்தரவிட்டார். இதையடுத்து  வத்தலக்குண்டு போக்கு வரத்து கழக மேலாளர் காலை மற்றும் மாலை இரு வேளையில் தலா நான்கு அரசு பேரந்துகளை வத்தலக் குண்டு, நிலக்கோட்டை, கொடைரோடு, வாடிப்பட்டி,சோழவந்தான்,திண்டுக்கல் ஆகிய ஊருக்கு செல்லும் வகையில் இயக்க ஏற்பாடு செய்துள்ளனர்,இதனால் கல்லூரி மாணவிகள்,பேராசிரியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் இந்த உடனடி நட வடிக்கையை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வரவேற்றனர்.

நிலம் கொடுத்தவர் இழப்பீடு கோரிய வழக்கு  திண்டுக்கல் ஆட்சியரகத்தில்  ஜப்தி நடவடிக்கை ஒத்திவைப்பு

திண்டுக்கல், பிப்.7- திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் வழங்கிய வர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் நீதி மன்ற ஜப்தி நடவடிக்கை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.  திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டு வதற்காக 1987 ஆம் ஆண்டு மனோன்மணியம் என்பவர்  நிலம் வழங்கியுள்ளார்.  அன்றைய காலத்தில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு கொடுத்த பணம் போதுமானது அல்ல என்று மனோன்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு நடை பெற்றது. இதனை அடுத்து நீதிமன்றம் மனோன்மணி யத்திற்கு 77 லட்சம் மற்றும் வட்டியுடன் இழப்பீடு வழங்க  வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த  வழக்கில் இதுவரை மனோன்மணிக்கு இழப்பீடு வழங்காத  நிலை இருந்தது.  இதனை அடுத்து நீதிமன்றம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று கார்,  கம்ப்யூட்டர்,   ஏர் கண்டிஷன் மெஷின், சேர், டேபிள், ஃபேன்,  டைப்  மிஷின்இ  உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும்  என்று உத்தரவிட்டதை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் மற்றும் டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய முன்வந்தனர்.  இந்நிலையில் திண்டுக்கல் ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்  படையில் இழப்பீடு விரைவில் வழங்குவதாக ஒப்புக்  கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் ஜப்தி நட வடிக்கை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் ஆட்சியர்  அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது  அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

போடி அருகே கணவன்-மனைவி தகராறில் தற்கொலை முயற்சி 2 குழந்தைகள் பலி

தேனி, பிப்.7- தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் ராமராஜ் (32). இவரது மனைவி வீரமணி (25). இவர்களது மகன் ராஜ பாண்டி (6), ஈசாஸ்ரீ (4), ஜீவிதா ஸ்ரீ (2). ராமராஜ் குடும்பத்து டன் கேரள மாநிலம் பாரத்தோடு அருகே காரித்தோடு என்ற இடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.  கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ள னர். பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பியதன் பேரில்  கேரளத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலை யில் இரண்டு தினங்களுக்கு முன் குல தெய்வக் கோவிலுக்கு பொட்டிப்புரம் வந்துவிட்டு கேரளத்துக்கு செல்ல தயாராகி வந்தனர்,அப்போது  கணவன் மனைவிக்கிடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை மாலை வீரமணி தனது  குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகே உள்ள  தோட்டப் பகுதிக்கு சென்றுள்ளார். இந்திரா காலனி அருகே  கிருஷ்ணசாமி என்பவரது கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு வீரமணியும் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.   தடுக்க வந்த ராமராஜூம் தற்கொலைக்கு முயன்று கிணற்றில் குதித்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் 5 பேரும் பலத்த காயமடைந்தனர். அருகில் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போடி தீயணைப்பு துறை யினர், போடி தாலுகா காவல்துறையினர் வந்து 5 பேரை யும் பலத்த காயங்களுடன் மீட்டனர். 5 பேரும் 108 அவசர  ஊர்தி  மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர். இதில் ஈசாஸ்ரீ (4), ஜீவிதாஸ்ரீ (2) ஆகி யோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேரும் ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இச்சம்பவம் குறித்து போடி தாலுகா காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சேலத்தில் லஞ்சம் வாங்கி கைதான  சார் பதிவாளரின் தேனி  இல்லத்தில் சோதனை

தேனி, பிப்.7- தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ஹை  ஸ்கூல் தெரு பகுதியில் வசித்து வருபவர் செல்லப்  பாண்டி. சார் - பதிவாளரான இவர், சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில்  பணி யாற்றி வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் குகை  பகுதியை சேர்ந்த பழனிவேலு என்பவரிடம் பத்திரம்  பெயர் மாற்றம் செய்து தருவதற்காக  ரூ.50ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை யினரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியாக இருந்ததாக இடைத்தரகர் கண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து  தேனியில் உள்ள சார் - பதி வாளர் செல்லப்பாண்டியின் இல்லத்தில் செவ்வா யன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர்கள் ஆம்ரோஸ் ஜெயராஜ், சூர்யகலா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் செல்லப்பாண்டியின் இல்லத்தில் உள்ள ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டதில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து அங்கிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் புறப்பட்டு சென்றனர்.‌

எல்ஐசி முகவர்களுக்கு பாராட்டுவிழா

இராமநாதபுரம்,பிப்.7- சர்வதேச அளவில் அதிகமான வணிகம்  செய்யக்கூடியவர்களை அமெரிக்காவில் உள்ள எம்டிஆர்டி கிளப்பில் உறுப்பின ராக சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உல கில் முக்கியமான நகரில்  ஒவ்வொரு வருட மும் எம்டிஆர்டி உறுப்பினர்களின் கூட்டம்  நடைபெறும். இத்தகைய எம் டி ஆர் டி  உறுப்பினர்களாக  ராமநாதபுரம் எல்ஐசி கிளையில் இந்த வருடம் 8 முகவர்கள் தகுதி பெற்றனர்.  அந்த எட்டு முகவர்களுக்கு ராமநாத புரம் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கம் சார்பாக   பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் எம். மாரிமுத்து தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துப்பாண்டி வர வேற்று பேசினார். காப்பீட்டு கழக ஊழியர்  சங்கத்தின் மதுரை கோட்ட  தலைவர் என்.  சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.  முது நிலை கிளை மேலாளர் லட்சுமணன், ராமேஸ்வரம் எஸ்.ஓ மேலாளர்  சுப்பிரமணி யன் , உதவி கிளை மேலாளர்.சிவக்குமார்,  லியாபி முகவர் அமைப்பின் தலைவர் பி. தில்லைபாக்கியம், லிகாய் முகவர் அமைப்  பின் செயலாளர் எம்.பி.கர்ணன்,  வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் .விக்  னேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.