மதுரை, பிப்.15- வீட்டில் கோபித்துக்கொண்டு மதுரை ரயில் நிலையத் தில் சுற்றிய 231 குழந்தைகள் மீட்கப்பட்டன. வீட்டில் கோபித்துக் கொண்டு வரும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், ஆதரவில்லாத குழந்தை கள் ஆகியோருக்கு புகலிடமாக அமைவது ரயில் நிலை யம் ஆகும். ரயில் நிலையத்தில் இது போன்ற குழந்தை களை பாதுகாக்க ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையத்தில் தஞ்சம் புகும் குழந்தைகளை பாதுகாக்க மத்திய ரயில்வே அமைச்சகம் வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அளவில் 143 முக்கிய ரயில் நிலை யங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழந்தைகள் மீட்கும் நடவ டிக்கைக்கு சிறிய தேவதைகள் என பெயரிடப்பட்டுள் ளது. காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்ட குழந்தைகள் போன்ற தகவல்கள் trackthemissing child.gov.in/trackchild/index.php என்ற இணைய இணைப்பு இந்திய ரயில்வே இணையதளத்தில் உள்ளது. இதன் மூலம் காணாமல் போன குழந்தைகள், மீட்கப்பட்ட குழந்தைகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள லாம். மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமநாத புரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் 176 குழந்தை கள், இராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் 21 குழந்தை கள், திருநெல்வேலி, செங்கோட்டையில் தலா 9 குழந்தை கள், திண்டுக்கல், தூத்துக்குடியில் தலா 6 குழந்தைகள், விருதுநகரில் 4 குழந்தைகள் மொத்தம் 231 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மீட்கப்பட்டு, பாது காக்கப்பட்டு பெற்றோர் மற்றும் காப்பகத்தில் ஒப்படைக் கப்பட்டுள்ளனர்.