தேனி, அக்.3- பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக தேனி மக்க ளவை உறுப்பினர் ரவீந்திர நாத் மீது விசாரணை நடத்த வேண்டும், கிடை போட்டி ருந்த அலெக்ஸ்பாண்டியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கால் நடை வளர்ப்போர் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரிய குளம் கோம்பை வனப்பகுதி யில் சோலார் மின்வேலியில் கடந்த 27-ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. வனத் துறையினர் அதை விடுவிக்க முயன்ற போது உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனை கடித்துவிட்டு தப்பியோடி யது. மறுநாள் அருகில் உள்ள இன்னொரு வேலியில் இந்த சிறுத்தை சிக்கி இறந்து கிடந்தது. இதுதொடர்பாக அந்தத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்த அலெக்ஸ் பாண்டியன் (35) வனத்துறை யினரால் கைது செய்யப்பட் டார். இது குறித்து கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சத்யம் சரவணன் கூறுகையில், தேனி மக்க ளவை உறுப்பினர் ரவீந்திர நாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப் பட்ட வேலியில் சிக்கித்தான் சிறுத்தை உயிரிழந்தது. அவர் களை விட்டுவிட்டு தற்காலிக மாக கிடை அமைத்து ஆடு வளர்த்தவரை கைது செய் தது தவறு. இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் எம்பி.ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். இருப்பினும் ரவீந்திர நாத்திடம் விசாரணை நடத்த வேண்டும். கைது செய்யப் பட்ட அலெக்ஸ்பாண்டி யனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் சத் யம் சரவணன் தலைமை வகித்தார். தேனி மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், கால் நடை வளர்ப்பவர்கள், விவ சாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.